districts

img

கல்வி தான் மிகப்பெரிய செல்வம்

ஈரோடு, ஜுலை 12- தாளவாடி வட்டத்தில் நடைபெற்ற சிறப்பு குறைதீர் முகாமில் மாவட்ட ஆட்சியர் கல்வி தான் மிகப் பெரிய செல்வம் என்று குறிப்பிட்டார். ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டத்தில் நடைபெற்ற சிறப்பு குறை தீர் முகாம் நடைபெற்றது. இதில், ஈரோடு  ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா  தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் அவர் பேசுகையில், அனைவரும் பயன் பெறும் வகையில் பல்வேறு துறை களின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள்  தெரிந்து கொள்ள முகாம்கள் நடத்தப் படுகிறது. இளைஞர்கள் மற்றும் குழந்தைகள்  தான் நமது எதிர்காலம். மாவட்ட நிர் வாகம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும். இன்றைய காலகட்டத்தில் கல்வி என்பது மிகப்பெரிய செல்வம்  ஆகும். அச்செல்வத்தை பெற  குழந்தை கள் இடைநிற்றலை தவிர்த்திடும் வகை யில் தமிழக அரசு நான் முதல்வன்,  புதுமைப்பெண், காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை அறி வித்து செயல்படுத்தி வருகிறது. இங்குள்ள மாணவர்கள் உயர்  கல்வி பெறும் வகையில்  ரூ.20 கோடி  மதிப்பீட்டில் அரசுக் கலைக்கல்லூரி கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றது. அடுத்த கல்வி ஆண்டு முதல் புதிய கட்டடத்தில் கல்லூரி இயங் கும். அரசின் திட்டங்களை பொது மக்கள் அறிந்து பயன்பெற வேண்டும் என தெரிவித்தார். இம்முகாமில், 67 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்கள், 77 பயனாளிகளுக்கு சாதிச்சான்றிதழ்கள் உள்ளிட்ட 240 பயனாளிகளுக்கு ரூ.50.80  லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.