தருமபுரி, மார்ச் 6- கோடைக்காலத்தில் ஏற்படும் குடிநீர் பிரச்சனைகளை தீர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவ டிக்கைகள் குறித்து அலுவலர்க ளுக்கு தருமபுரி ஆட்சியர் அறிவு றுத்தியுள்ளார். தருமபுரி மாவட்டத்தில் கோடைக் காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்ப டும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவ டிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோ சனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற் றது. இக்கூட்டத்தில், பராமரிப்பு இல் லாமல் இருக்கும் மின்மோட்டார் கள், குழாய்களை சரிசெய்து விரைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளில் ஏற் படும் சவால்களை சமாளிக்க நிரந் தர தீர்வு காண வேண்டும். தண்ணீர் பிரச்சனைகளைப் பற்றி மக்கள் கூறும் குறைகளை உடனடி தீர்வு காண வேண்டுமென அறிவுறுத்தப் பட்டது. மேலும், விளிம்பு நிலையில் வாழும் மக்கள், இருளர் மக்கள் வாழும் வாழ்விடங்களில் ஏற்படும் குடிநீர் பிரச்சனைகளுக்கு முன்னு ரிமை அளித்து, அதனை விரைந்து தீர்க்க வேண்டும். மண்டல அலுவ லர்கள் அனைத்து ஊராட்சி ஒன்றி யங்களிலும் நேரில் கள ஆய்வு செய்து, குடிநீர் தட்டுப்பாடு அதிக முள்ள பகுதிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டுமென ஆட்சியர் கி.சாந்தி அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சி யர் (வளர்ச்சி) கௌரவ்குமார், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கணேசன், உதவி இயக்குநர் (ஊராட் சிகள்) மா.மணிவாசகம் உட்பட குடி நீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.