districts

img

விதிமுறைப்படி மறைமுக தேர்தலை நடத்திட வேண்டும்

தருமபுரி மார்ச் 1- விதிமுறைகளுக்கு உட்பட்டு மறைமுக தேர்தலை சிறப்பாக நடத்த வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி உத்தரவிட்டுள்ளார். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வா யன்று மாவட்ட ஆட்சியர் ச.திவ்ய தர்சினி தலைமையில் நடைபெற் றது. இக்கூட்டத்தில் அவர் பேசு கையில், தமிழ்நாடு மாநில தேர் தல் ஆணைத்தின் உத்தரவின்படி, தருமபுரி நகராட்சி மற்றும் 10  பேரூராட்சிகளின் வார்டு உறுப்பி னர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி  தேர்தல் நடைபெற்று முடிந்தது. மேலும், இத்தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி வருகின்ற புதனன்று  (இன்று) நடைபெற உள்ளது. நக ராட்சிகள் மற்றும் பேரூராட்சிக ளின் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் மார்ச் 4 ஆம் தேதியன்று நடைபெற உள் ளது.  இதனை முன்னிட்டு தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சி களின் தேர்தல் நடத்தும் அலு வலர்கள் தமிழ்நாடு மாநில தேர் தல் ஆணையம் வழங்கியுள்ள அறிவுரைகளை முழுமையாக பின்பற்றி வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சியை உரிய விதிகளின்படி நடத்த வேண்டும். அந்தந்த நகராட்சி மற்றும் பேரூ ராட்சிகளின் மன்றக் கூட்டரங்கில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி அனைத்து நடவ டிக்கைகளையும் கண்காணிக்க வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுக தேர்தலில் கடைபிடிக்க வேண் டிய விதிமுறைகளை முழுமை யாக பின்பற்றி, இம்மறைமுக தேர் தல்களை விதிமுறைகளுக்கு உட் பட்டு சிறப்பாக நடத்திட வேண் டும் என மாவட்ட ஆட்சியர் ச.திவ்ய தர்சினி உத்தரவிட்டார்.  முன்னதாக, இக்கூட்டத்தில், தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜ யன், கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.அண்ணா மலை, அரூர் வருவாய் கோட்டாட் சியர் முத்தையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.