districts

img

சீமை கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்கோயம்புத்தூர்

நாமக்கல், ஜூன் 19- ஏரிகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி நிலத்தடி நீரை பாது காக்க வேண்டும் என தமிழ்நாடு விவ சாயிகள் சங்க எலச்சிபாளையம் ஒன் றிய மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க  நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளை யம் ஒன்றியத்தின் 2 ஆவது மாநாடு ஞாயிறன்று மோளிப்பள்ளியில் சி. பெரியசாமி தலைமையில் நடைபெற் றது. இதில், சங்கத்தின் மாவட்ட தலை வர் ஆதிநாராயணன், மாவட்ட செயலா ளர் பி.பெருமாள், மாவட்ட துணைத் தலைவர் கே.பூபதி, மாவட்ட உதவி செயலாளர் ஆர்.வேலாயுதம், பால் உற் பத்தியாளர் சங்க மாவட்ட தலைவர் முத்துசாமி உட்பட பலர் கலந்து கொண் டனர். இம்மாநாட்டில், வேளாண் விஞ் ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந் துரை அடிப்படையில் விவசாய உற் பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச விலையாக உற்பத்தி செலவுடன் 50 சதவிகிதம் சேர்த்து வழங்க வேண்டும். மின் இணைப்பு கேட்டு காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக மும் முனை மின் இணைப்பு வழங்க வேண் டும். ஏரிகளில் உள்ள சீமை கருவேல மரங்களை உடனடியாக அகற்றி நிலத் தடி நீரை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து சங்கத்தின் புதிய ஒன்றிய தலைவராக பெரிய சாமி, செயலாளராக ஆர்.குப்புசாமி, பொருளாளராக பெரியசாமி, துணைத் தலைவராக டி.தங்கவேல், உதவி செயலாராக பெரியசாமி உட்பட 14 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய் யப்பட்டது.