கோவை, ஜூலை 11- கோவையிலிருந்து சேலம், பாலக்காடு, சொர் ணூர் இடையிலான முன்பதி வில்லா சிறப்பு விரைவு ரயில் கள் திங்களன்று முதல் இயக்கப்படும் என அறிவிக் கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சொர்ணூர் - கோவை இடையிலான முன்பதிவில்லா மெமு சிறப்பு விரைவு ரயில் (எண்: 06804), சொர்ணூர் ரயில் நிலை யத்திலிருந்து திங்களன்று முதல் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு, மாலை 5.50 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்த டையும். மேலும், கோவை - சொர்ணூர் இடையிலான சிறப்பு ரயில் (எண்:06805), கோவையிலிருந்து திங்களன்று முதல் காலை 11.20 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 2.30 மணிக்கு சொர் ணூர் சென்றடையும். இதேபோன்று பாலக்காடு - கோவை முன்பதிவில்லா மெமு சிறப்பு விரைவு ரயில் (எண்:06806), பாலக்காடு ரயில் நிலையத்திலிருந்து திங்களன்று முதல் காலை 7.20 மணிக்கு புறப்பட்டு, காலை 9 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்தடையும். கோவை - பாலக்காடு இடை யிலான முன்பதிவில்லா சிறப்பு ரயில் (எண்: 06807), கோவை யிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு, இரவு 7.55 மணிக்கு பாலக்காட்டை சென்றடையும். இதேபோன்று கோவை - சேலம் இடையிலான முன்பதி வில்லா மெமு சிறப்பு விரைவு ரயில் (எண்:06802), கோவை ரயில் நிலையத்திலிருந்து திங்களன்று முதல் காலை 9 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1 மணிக்கு சேலம் ரயில் நிலை யம் சென்றடையும். மேலும், சேலம் -கோவை இடையி லான சிறப்பு ரயில் (எண்:06803) சேலத்திலிருந்து திங்க ளன்று முதல் மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு, மாலை 5.50 மணிக்கு கோவை வந்தடையும். மேற்கண்ட ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற 6 நாட்களும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.