கோவை, பிப்.9- உயர்த்தப்பட்ட சம்பளத்தை வழங்கக்கோரி தூய்மை பணியா ளர்கள் வியாழனன்று கோவை அரசு மருத்துவமனையில் உள்ளி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், உதவி யாளர்கள், தள்ளுவண்டி இழுப்ப வர்கள் பணியாற்றி வருகின்றனர். இதேபோன்று இஎஸ்ஐ மருத்துவ மனையிலும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வரு கின்றனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.412 வழங்கப்பட்டு வரு கிறது. இந்நிலையில், தங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ரூ.721 வழங்கப்படும் என ஆட்சியர் அறிவித்தார். அதன் பின்னர் ஒப்பந்த தூய்மைப் பணி யாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். இவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், வியாழனன்று காலையில் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை யில் ஒப்பந்த தூய்மைப் பணியா ளர்கள் திடீரென மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கூறுகையில், நாங்கள் மருத்துவ மனையின் பிணவறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு நாள் ஒன்றுக்கு கூலியாக ரூ.412 வழங்கப்பட்டு வருகிறது. இதனை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தோம். இதையடுத்து ரூ.721 வழங்கு வதாக ஆட்சியர் அறிவித்தார். இதனை ஜனவரி மாதத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், 2 மாதங்களாகியும் உயர்த்தப்பட்ட சம்பளம் வழங்கப் படவில்லை. எனவே எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக நிர்ண யிக்கப்பட்ட ஊதியத்தை கூலியாக வழங்க வேண்டும். மேலும் அடிப் படை வசதிகள், பாதுகாப்பு உப கரணங்கள் வழங்க வேண்டும், என்றனர். அரசு மருத்துவமனையில் போராட்டம் நடைபெறுவது குறித்து, மருத்துவமனை முதல்வர் நிர்மலாவிற்கு தகவல் அளிக்கப் பட்டது. அவர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக் கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆனால், பணியாளர்கள் உத்தர வாதம் கொடுத்தப்படி தங்களுக்கு ஒரு நாள் ஊதியமாக ரூ.721யை உடனடியாக வழங்க வேண்டும் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனால் அரசு மருத்துவ மனை வளாகத்தில் பரபரப்பு ஏற் பட்டது.