districts

img

கோவை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா: 2 நாள் கோலாகலம்

கோவை, பிப்.11- கோவையில் நடைபெற்ற “கோயம்புத் தூர் சங்கமம் - நம்ம ஊரு திருவிழா” நிகழ்ச்சி யில், பல்வேறு கிராமிய கலைகளை அரங் கேற்றம் செய்யப்பட்டன. கோவை மாவட்டம், வஉசி மைதானத் தில், தமிழ்நாடு அரசின் கலைப்பண்பாட்டுத் துறை சார்பில், தமிழ் மண்ணின் கலைகளை  மக்கள் அனைவரும் களிப்போடு கொண்டா டும் வகையில் “கோயம்புத்தூர் சங்கமம் -  நம்ம ஊரு திருவிழா” சனியன்று மாலை  துவங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார். இவ் விழாவில், 2022 – 2023 ஆண்டுக்கான கலை விருதாளர்களான எஸ்.இராதா வெங்கடே சன் (வீணை), அ.இராஜகோபால் (எ) விஜய ராஜா (நாடக நடிகர்) குன்றகுடி.எஸ். ராம மூர்த்தி (குரலிசை) ஆகியோருக்கு கலை முதுமணி விருதுகளையும், கே.எஸ்.ரகு நாத் (மிருதங்கம்), ஜி.டி.ராஜேந்திரன் (மேடை நாடகம்), கி.தங்கவேல் (பம்பை)  ஆகியோருக்கு கலை நன்மணி விருதுகளை யும், டி.பாபு (நாடக கலைஞர்), ம.ஜெயபிர காஷ் நாராயணன் (தேவாரம்), ஸ்ரீராம் (குர லிசை) ஆகியோருக்கு கலைசுடர் மணி விரு துகள், மா.சரணவக்குமார் (சிலம்பம்), நா. நவீன் (ஒயில் கும்மி), அருண்குமார் (நாதஸ் வரம்) ஆகியோருக்கு கலை வளர்மணி  விருதுகளையும், கு.ஹர்சிதா (பரதநாட்டி யம்), சி.பி.சுதந்திரநாச்சினி (நாட்டுப்புற நட னம்), எஸ்.கௌசிகா (சிலம்பம்) ஆகியோ ருக்கு கலை இளமணி விருதுகளையும் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வழங் கினார். இதைத்தொடர்ந்து 2022 – 2023 ஆண்டுக் கான கலை விருதாளர்களுக்கு கலைமுது மணி, கலை நன்மணி, கலைசுடர் மணி, கலை  வளர்மணி, கலை இளமணி விருதுகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இவ்விழா கொங்கு நாட்டின் சுமார் 20  கலைக்குழுவினரின் நிகழ்ச்சிகளுடன் ஞாயி றன்றும் நடைபெற்றது. இவ்விழாவின் தொடக்கநாளான சனியன்று சின்னவேடம் பட்டி ஸ்ரீஅலமேலு மங்கம்மாள் - நஞ்சப்பன் குழுவினரின் நையாண்டி மேளம், நீலகிரி மலை அரசி - அம்சமல்லி குழுவினரின் தோடர் நடனம், சங்கரம் நாட்டியப்பள்ளியின் சஸ் மிதா அரோரா குழுவினரின் பரதநாட்டியம், மேட்டுப்பாளையம் சேரன் துடும்பாட்டம் - சாமிநாதன் குழுவினரின் துடும்பாட்டம், ருத்ராஞ்சநேயா - ருத்ரமூர்த்தி குழுவினரின் சிலம்பாட்டம், ஈரோடு முகில் கலை – தேவி குழுவினரின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி,  கதிரவன் கலைக்குழு - தியாகராஜன் குழு வினரின் பொக்கிசம் நாடகம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  இதைத்தொடர்ந்து ஞாயிறன்று நவரச நாட்டியாலயா – விஜயலட்சுமி குழுவினரின் பரதநாட்டியமும், மேட்டுப்பாளையம் கலை வாணி கிராமியக் கலைக்கழுவினரின் நாட் டுப்புறக் கலை நிகழ்ச்சி, பொள்ளாச்சி கண் ணாடி வெண்புறா - விஜயகுமார் குழுவினரின் ஜிக்காட்டம், திருப்பூர் கவிநயா நாட்டியா லயா – மேனகா குழுவினரின் நாட்டிய நாடகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில்  மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக் குநர் வ.கோபாலகிருஷ்ணன், கலை பண் பாட்டு துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.