districts

img

கோவை எம்.பி., தொகுதி நிதியில் அங்கன்வாடி மையம் கட்ட அடிக்கல்

திருப்பூர், டிச.19- சாமளாபுரம் பேரூராட்சி,  வி.அய்யம்பாளையம் பகுதியில் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில், புதிய  அங்கன்வாடி மைய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட் டது. திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் பேரூ ராட்சி, 15 ஆவது வார்டுக்குட்பட்ட வி.அய் யம்பாளையம் பகுதியில் புதிய அங்கன் வாடி மைய கட்டடம் கட்ட கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து  ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இந்நி லையில், அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி, சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்  தலைவர் விநாயகா பழனிச்சாமி தலைமை யில் நடைபெற்றது. இதில் திமுக செயலா ளர் சண்முகம், பள்ளபாளையம் தொடக்க  வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள்  தலைவர் வடிவேல், அதிமுகவைச் சேர்ந்த அனுப்பட்டி மணி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வி.அய்யம்பாளையம் கிளைச் செயலாளர் ஏ.இ.சுப்பிரமணியம், ஆறுமுகம் உட்பட அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.