கோவை, மார்ச் 6- காளப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி யில் “வருமுன் காப்போம், திட்டத்தினை கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஞாயி றன்று துவக்கி வைத்தார். காளப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி யில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத் தினை கோவை மேயர் கல்பனா ஆனந்த குமார் ஞாயிறன்று துவக்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில் மேயர் கல்பனா பேசுகையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆணைப்படி, காளப்பட்டியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் மருத்துவ முகாம் தொடங்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் தலா ஒரு நகர் நல மையம் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் மொத்தம் 63 இடங்களில் ரூ.15.75 கோடி மதிப்பீட்டில் கட்ட தமிழக முதல்வர் நிதி ஒதுக்கீடு செய் துள்ளார். இந்த மருத்துவ முகாமில் மகப் பேறு, குழந்தைகள் நலம், எலும்பு முறிவு, பொது மருத்துவம் போன்ற பல்வேறு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. தமி ழக அரசு ஆணைப்படி கோயம்புத்தூர் மாந கராட்சியில் 4 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில், முதல் முகாமில் பயனடைந்தவர்கள் எண் ணிக்கை 1040பேர். முதல் முகாமில் 1359 பரிசோதனைகள் செய்யப்பட்டது. ஏழு நபர்கள் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்து வமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள னர். இந்த மருத்துவ முகாம்களை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண் டும் என அவர் தெரிவித்தார். முன்னதாக, 40 பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்ட கங்களை மேயர் கல்பனா வழங்கினார். இதன்பின், காளப்பட்டி 8வது வார்டு மாநக ராட்சி மேல்நிலைப்பள்ளியில் கழிவறை கள் சுத்தமாக உள்ளதா என நேரில் சென்று பார்வையிட்ட அவர், கழிவறை களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராம ரிக்க வேண்டும் என மாநகராட்சி பொறியா ளர்களுக்கு உத்தரவிட்டார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் மாநக ராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, நகர்நல அலுவலர் சதீஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், நவீன்குமார், கோவிந்தராஜ், பொன்னுசாமி, சித்ரா மணி யன், பூங்கொடி, சரஸ்வதி மற்றும் மாநக ராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.