districts

கோவை மண்டல எல்ஐசி தொழிற்சங்கங்கள் வேண்டுகோள்

கோவை, பிப்.5- ஹிண்டன்பர்க் அறிக்கையின் குற்றச்சாட்டுகளின் மீது அரசு பாரபட்ச மற்ற விசாரணையை மேற்கொள்ள வேண்டும்; உண்மையைக் கண்டறிய வேண்டும். அதேசமயம் பொதுத்துறை நிநி நிறுவனத்தில் நலனை கருத்தில் கொண்டு எல்ஐசி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தும் முடிவை காங்கிரஸ் கட்சி கைவிட வேண்டும் எனவும் கோவை மண்டல எல்ஐசி தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக கோவை மண்டல அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், முதல் நிலை அதிகாரிகள் சங் கம், வளர்ச்சி அதிகாரிகள் சங்கம் ஆகி யவை விடுத்துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது, அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவ னம் அதானி குழும நிறுவனங்கள் மீது மோசமான அறிக்கையை வெளியிட்ட திலிருந்து, அதானி குழும நிறுவனங்க ளுடனான முதலீடுகளால் எல்ஐசி அதிக பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. மேலும் நடுத்தர வர்க்க மக்களின் சேமிப்பை எவ்வாறு இத்தகைய ஆபத்தில் ஆழ்த்தலாம் என்றும் பெரும் பகுதி மக்களும், அரசியல் கட்சிகளும் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். பொதுத்துறை, மக்கள் மற்றும் பொரு ளாதாரத்தை காவு கொடுத்து விட்டு, எந்தவொரு வணிகக் குழுவிற்கும் அர சியல் ஆதரவை வழங்குவதை நாங்கள் எதிர்க்கிறோம். ஹிண்டன்பர்க் அறிக் கையின் குற்றச்சாட்டுகளின் மீது அரசு பாரபட்சமற்ற விசாரணையை மேற் கொள்ள வேண்டும்; உண்மையைக் கண் டறிய வேண்டும்.

எல்ஐசி ஒரு நீண்ட கால முதலீட்டா ளர். அதோடு, அதன் முதலீட்டு முடிவு கள் பாலிசிதாரர்களின் நீண்ட கால பலன் களை கவனத்தில் வைத்து எடுக்கப்படு கின்றன. எல்ஐசியானது நாடாளுமன் றத்தின் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக இருப்ப தால், அதன் அனைத்து முதலீடுகளும், முதலீட்டு முடிவுகளும் நாடாளுமன்ற ஆய்விற்கும் மற்றும் ஒழுங்குமுறை அமைப்பின் மேற்பார்வைக்கும் உட்பட் டவை ஆகும். அதோடு மட்டுமல்லாமல், எல்ஐசிக்கென ஒரு முதலீட்டுக்குழு உள் ளது. முதலீடு பற்றிய முடிவுகள் முழு மையான ஆய்வு, பரிசீலனைக்குப் பின் அக்குழுவால் முழுமையாக எடுக்கப் படுகிறது. எல்ஐசியின் முதலீட்டுக்கொள்கை என்னவென்றால், அதன் முதலீடுகளில் 80 சதவிகித மிகப்பாதுகாப்பான அர சாங்கப் பத்திரங்கள் அல்லது பத்திரங் கள் போன்றவற்றில் மட்டுமே முதலீடு செய்யப்படுகிறது. மீதமுள்ள 20 சதவி கித முதலீடுகள் மட்டுமே பங்குகளில் முதலீடுகள் செய்யப்படுகிறது. எனவே, பாலிசிதாரர்கள் முதலீடு செய்துள்ள நிதி முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது. அதானி குழுமத்தில் முதலீடு மற்றும்  எல்ஐசிக்கு ஏற்பட்டதாகச் சொல்லப் படும் இழப்பு குறித்து, நாம் தெளிவு படுத்த வேண்டும். இந்த இழப்பு கற்ப னையானது; அதாவது ஊகத்தின் அடிப் படையிலானது; உண்மையான இழப்பு  அல்ல. தான் வைத்துள்ள அதானி குழு மத்தின் பங்குகள் எதையும் எல்ஐசி சந்தையில் விற்கவில்லை என்ப தால், எல்ஐசிக்கு இழப்பு எனச் சொல் லப்படும் எந்த நஷ்டமும் ஏற்பட வில்லை.

எல்ஐசியும் ஏற்கனவே ஜன.30 ஆம்  தேதியன்று வெளியிட்டுள்ள செய்தி  அறிக்கை மூலம் தெளிவுபடுத்தியுள் ளது. அதாவது, அதானி குழும நிறுவ னங்களில் எல்ஐசி செய்துள்ள மொத்த  முதலீடுகளான ரூ.36,474.78 கோடிக் கான பங்குகளின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.56,142 கோடியாக உள்ளது. இதன் மூலம் எல்ஐசி அதானி குழுமத் தில் செய்த முதலீட்டில் கிட்டத்தட்ட ரூ.20 ஆயிரம் கோடி லாபம் ஈட்டியுள் ளது. இருப்பினும், இழப்பு எப்படி ஊகிக் கப்பட்ட இழப்பாகவே இருக்கிறதோ அதேபோலவே இந்த லாபமும் கற்ப னையானது. ஒவ்வொரு ஆண்டும், எல்ஐசி சுமார்  ரூ.4.5 முதல் ரூ.5 லட்சம் கோடி வரை  முதலீட்டு உபரியை உருவாக்குகிறது. இதன் ஒரு பகுதியை, பாலிசிதாரர் களுக்கு வருமானம் தரும் வகையில், புளூ சிப் நிறுவனங்களில் தேர்ந்த ஞானத் தின் அடிப்படையில் முதலீடு செய்ய வேண்டியுள்ளது. இப்பணத்தை சும்மா வைத்திருக்க முடியாது. அதானி குழு மத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடுக ளைப் பொறுத்தவரை, மொத்த பங்கு  முதலீடுகளில் சுமார் 7 சதவிகிதம் மட் டுமே தற்போது பாதிப்பிற்குள்ளான தாக சொல்லப்பட்டு வரும் முதலீடு சார்ந்ததாகும். அதானி குழும நிறுவனங் களின் மொத்த சந்தை மூலதனத்தில், எல்ஐசி 3.91 சதவிகித பங்குகளை வைத் திருக்கிறது என்கிற அதே சூழலில், டாடா, ரிலையன்ஸ் குழும நிறுவ னங்களில் முறையே 3.98 சதவிகித மற் றும் 6.45 சதவிகித என்ற அளவில் அதிக மான பங்குகளை வைத்துள்ளது என் பது குறிப்பிடத்தக்கது.

எல்ஐசி இதற்கு முன்பும் இது போன்ற பொது ஆய்வுக்கு உட்படுத்தப் பட்ட சூழல்கள் உண்டு. குறிப்பாக ஓஎன் ஜிசி மற்றும் ஐடிபிஐ வங்கியில் அதன் பங்குகளை வாங்குவது தொடர்பான முடிவின் போது உள்ளது. ஆனால்,  ஓஎன்ஜிசி பங்குகளில் எல்ஐசி நேர்மை யான லாபம் ஈட்டியதுடன், ஐடிபிஐ வங் கியை லாபகரமான நிறுவனமாக மாற்று வதையும் உறுதி செய்தது. எல்ஐசிக்கும் வங்கிகள் போன்ற மற்ற முதலீட்டாளர் களுக்கும் உள்ள வித்தியாசம், எல்ஐசி ஒரு நீண்ட கால முதலீட்டாளர். ஆனால், வங்கிகள் அப்படி இல்லை என்பதே யாகும். பொறுப்பு தீர்வு விகிதம் எனச் சொல்லப்படும் சால்வன்ஸி மார்ஜினை தேவையானதை விட மிக அதிகமா கவே எல்ஐசி வைத்துள்ளது. எல்ஐசி யின் வியப்புக்குரிய அம்சம் என்ன வெனில் அனைத்து பொறுப்பு தீர்வுக ளுக்கான ஈடு, எல்ஐசியின் சொத்துக்க ளின் புத்தக மதிப்பினைக் கொண்டு  மதிப்பிடப்பட்டுள்ளது, அதன் உண்மை  சந்தை மதிப்பைக் கொண்டதல்ல என்ப தாகும். எனவே எப்படிப் பார்த்தாலும் மக்க ளின் சேமிப்பு, முதலீடு முற்றிலும் பாது காப்பாகவே உள்ளது. ஒட்டுமொத்த தேசத்தின் முன்னேற்றத்தை உத்தர வாதம் செய்வதற்கான தமது தொடர் உறுதிபாட்டினூடே எல்ஐசியானது, மக் கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த சேமிப்பி லிருந்து நிதியாதாரத்தைத் திரட்டு வதில், அவர்களது சேமிப்பிற்கு நல்ல வருமானம் மற்றும் முழுமையான பாது காப்பை உறுதிசெய்வதில் 60 ஆண்டு களுக்கும் மேலான களங்கமற்ற சாத னையை தன்னகத்தே கொண்டிருக்கி றது. இதைக்கருத்தில் கொண்டு நாடு முழுவதும் பிப்.6 ஆம் தேதியன்று (இன்று) எல்ஐசி அலுவலகங்கள் முன்பு  திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத் தினை, தேசத்தின் மிகச்சிறந்த பொதுத் துறை நிதி நிறுவனத்தின் நலனை கருத் தில் கொண்டு கைவிட வேண்டுமென நாங்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை கேட்டுக் கொள்கிறோம். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.