கோவை, மார்ச் 2 - கோவையில் பிரசித்தி பெற்ற கோனியம் மன் கோவில் தேரோட்டம் புதனன்று நடை பெற்றது. கோவையின் காவல் தெய்வம் என்ற ழைக்கப்படும் கோனியம்மன் கோயில் தேரோட்டம் புதனன்று நடைபெற்றது. தேர் முட்டி பகுதியில் அலங்காரத்துடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேர் மதியம் வீதி உலா வந்தது. தேர்முட்டியில் இருந்து ஒப்பணக் கார வீதி, பிரகாசம் உள்ளிட்ட மாநகரின் பிர தான பகுதிகளில் உலா சென்று ராஜவீதி வழி யாக மீண்டும் தேர் முட்டியில் நிறைவடைந் தது. முன்னதாக, தேர் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு டவுன்ஹால் பகுதி யில் உள்ள அத்தார் ஜமாத் பள்ளிவாசல் முன்பு இஸ்லாமியர்கள் தண்ணீர் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கினர். இது கோவையின் பண்பாட்டு ஒற்றுமையை கோவை மக்கள் தொடர்ந்து பாதுகாத்து வருவதை உறுதி செய்வதைப் போல் அமைந்திருந்தது.