கோவை, ஜூலை 21– கோவை அன்னூர் பகுதியை சேர்ந்த கட்டிடத்தொழிலாளி மின் சாரம் தாக்கி கை,கால்களை இழந்த நிலையில் அவருக்கு செயற்கை கை,கால்களை பொருத்தி கோவை அரசு மருத்துவமனை மருத்துவர் கள் சாதனை புரிந்துள்ளனர். கோவை அன்னூர் பகுதி வேப் பம்பள்ளம் குமரன் குன்றை சேர்ந்த வர் சுபாஷ் (22). இவர் கடந்த பிப்ர வரி மாதம் மின்சார விபத்தில் இரண்டு கால்களை முழங்காலுக்கு கீழும், இரண்டு கைகளை முழங் கைகளுக்கு கீழும் இழந்தார். இவ ரின் பெற்றோர்களும் கட்டிட பணிக்கு சென்று வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிற நிலை யில், அனைத்து தேவைகளுக்கும் மற்றவர்களை எதிர்பார்த்து காத்தி ருக்கும் நிலையில் இருந்தார். இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரனி டம் உதவி கேட்டு விண்ணப்பித்தி ருந்தார். இதனையடுத்து கோவை மாவட்ட மறுவாழ்வு அலுவலர் வசந்தகுமார் மற்றும் கோவை மருத் துவக் கல்லூரி முதல்வர் நிர்மலா சுபாஷுக்கு செயற்கை கை, கால் பொருத்தும்படி ஆவன செய்ய உத் தரவிட்டார். கோவை மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் நிர்மலா மற் றும் முட நீக்கியல் இயக்குநர் மருத் துவர் வெற்றிவேல் செழியன் தலை மையில் செயற்கை அங்க வடிவ மைப்பாளர்கள் பாலச்சந்தர்,
ஆனந்த்பாபு, கோகுல்ராஜ், ஜெகன் ஆகியோர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு தமிழக அர சின் விரிவான காப்பீட்டுத் திட்டத் தின் கீழ் எடை குறைந்த இரு செயற்கை கைகள் மற்றும் இரு செயற்கை கால்கள் இலவசமாக பொருத்தப்பட்டது. மேலும் இவருக்கு மனப் பயிற்சி, உடற்பயிற்சி, நடைபயிற்சி ஆகியவை முடநீக்கியல் மருத்துவ நிபுணர்கள், மனநல மருத்துவ நிபுணர்கள், உடற்பயிற்சி நிபுணர் கள்களால் வழங்கப்பட்டன. இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்களை இழந்தவருக்கு தமிழ் நாட்டில் முதன் முறையாக விரி வான மருத்துவ காப்பீட்டு திட்டத் தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை அங்கங்களை தனியார் மருத்துவமனைகளில் பொருத்துவ தற்கு தருவிப்பதற்கு குறைந்தபட் சம் செலவு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் செலவாகும். ஆனால் காப் பீட்டு திட்டத்தின் கீழ் இரு செயற்கை கைகள் மற்றும் இரு செயற்கை கால்கள் இலவசமாக பொருத்தப் பட்டன. தற்போது சுபாஷ் இயல் பாக தனது வேலைகளை செய்யும் அளவிற்கு உடல் நலம் மற்றும் மனநலம் தேறிவிட்டார். இதனைய டுத்து கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து அவர் நன்றி தெரிவித்தார். முன்னதாக வெற்றிகரமாக இந்த சிகிச்சையை மேற்கொண்ட கோவை அரசு மருத்துவ மனையின் மருத்துவ குழுவினருக்கு கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல ரும் வாழ்த்து தெரிவித்தனர்.