districts

img

மருத்துவமனை நிர்வாகத்திடமே புகாரளிக்க ஏற்பாடு செய்யப்படும்

கோவை, ஜூலை 21- நோயாளி ஒருவர் உயிரிழந்த தற்கு மருத்துவமனையே காரணம் என உறவினர்கள் குற்றஞ்சாட்டி யுள்ள நிலையில், மருத்துவமனை நிர்வாகத்திடமே புகாரளிக்க ஏற் பாடு செய்யப்படும் என கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர் மலா தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் - காளி யம்மாள் தம்பதியினரின் மகன் ராஜேஷ் குமார் (38). கோவை அரசு  மருத்துவமனையில் கடந்த புத னன்று டயாலிசிஸ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் வியாழனன்று உயிரிழந்தார். இந் நிலையில், உயிரிழப்புக்கு அரசு மருத்துவமனையின் அலட்சியமே காரணம் எனவும், மருந்துகளை வெளியே வாங்கி வர சொல்வதும், லஞ்சம் போன்ற காரணங்கள் நிலவு வதாக அவரது குடும்பத்தினர் குற் றஞ்சாட்டினர். இந்த விவகாரம் குறித்து கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர் மலா வெள்ளியன்று செய்தியாளர் களிடம் கூறுகையில், ராஜேஷ் குமார் கிட்னியின் செயல்திறன் மற் றும் திசுக்கள் ஏற்கனவே பாதிக்கப் பட்டிருந்தது. நீண்ட நாட்களாகவே அவருக்கு பாதிப்பு இருந்ததால், நீண்ட கால டயாலிசிஸ் தேவைப் படும் நிலை இருந்தது. ஏற்கனவே 8 முறை டயாலிசிஸ் செய்யப்பட்டுள் ளது. கோவை அரசு மருத்துவம னைக்கு ஜூலை 5 ஆம் தேதியன்று தான் முதலில் சிகிச்சைக்கு அவர் சிகிச்சைக்கு வந்தார். அவருக்கு ஜெனடிக் பரிசோதனை செய்த போது, ஜீன்கள் மோசமாக இருந் தது. மேலும், இந்த பரிசோதனை செய்ய அதிக செலவு ஆகும் என்ப தால், முதல்வர் காப்பீட்டு திட்டத் தில் சிகிச்சை அளித்தோம். அவ ருக்கு சர்க்கரை அளவு கட்டுப்பாட் டில் இல்லாமல் இருந்தது. இங்கு அவருக்கு அதிக அக்கறையுடன் தான் சிகிச்சை அளித்தோம். அவர் வியாதிகளால் தான் இறந்துள்ளார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை  முறையில் எந்த தவறும் இல்லை.  கோவை அரசு மருத்துவமனை யில் மருந்துகளை வெளியில் வாங்க கூறுவது இல்லை. லஞ்சம் யார் கேட் டது? என கூறினால் நிச்சயமாக நடவ டிக்கை எடுக்கப்படும்.

மேலும், ஸ்கேன் செய்வதற்கு 500 ரூபாய் கட் டணம் என்பது நடைமுறையில் இருப்பது தான். மருந்து தட்டுப்பாடு ஏதேனும் இருந்தால் துறை தலை வர்கள் தரப்பில் உரிய தகவல் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப் படும். மேலும், ராஜேஷ்க்கு குணப் படுத்தும் வகையிலான நோய் இல்லை. அவர் 50 வயதிற்கு மேல் வரும் நோய் 35 வயதிலேயே ஏற்பட் டுள்ளது. மேலும், கோவை அரசு  மருத்துவமனைக்கு அவசரகதி யில் சிகிச்சைக்கு வருபவருக்கு உட னடியாக சிகிச்சை அளிக்கக்கப்படு கிறது. கோவை அரசு மருத்துவம னையில் ஏதேனும் லஞ்ச முறை கேடுகள் நடைபெற்றால் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்க  ஏதுவாக தொலைபேசி எண்களு டன் கூடிய சுவரொட்டிகள் தற்போது  ஒட்டப்பட்டுள்ளது. இனி மருத்துவ மனை நிர்வாகத்திடமும் நேரடியாக புகாரளிக்கும் வகையில், தொலை பேசி எண்களுடன் கூடிய சுவ ரொட்டிகள் ஒட்டப்படும். எந்த குற்றாச்சாட்டாக இருந்தா லும் அது நிர்வாகத்தின் கவனத்தில் கொண்டு வரப்படும் போது, உடன டியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு,  தீர்வு காணப்படுகிறது. மருத்துவர் கள் மற்றும் மருத்துவ பணியாளர் களின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தரமான மருத் துவ சிகிச்சை வழங்க தொடர் நடவ டிக்கை மேற்கொள்ளப்படும், என் றார். இந்த செய்தியாளர் சந்திப் பின் போது மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலர் சர வண பிரியா உள்ளிட்ட மருத்துவர் கள் உடனிருந்தனர்.