districts

img

இதயத்தில் காயத்துடன் உயிருக்கு போராடிய சூடான் மாணவர்

கோவை, நவ.15- இதயத்தில் காயம் ஏற்பட்டு  உயிருக்கு போராடிய சூடான் நாட்டு இளைஞரை, கோவை அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழு துரித நடவடிக்கை மேற் கொண்டு, அறுவை சிகிச்சை மேற் கொண்டு உயிரை காப்பாற்றினர். சூடான் நாட்டை சேர்ந்த இளை ஞர் ஒருவர் கடந்த 2ஆம் தேதி,  நெஞ்சு மற்றும் வயிற்றுப்பகுதி களில் கத்திக்குத்து காயங்களுடன் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விசார ணையில் 24 வயது நிரம்பிய அந்த  இளைஞர் சூடான் நாட்டைச் சேர்ந்த வர் என்பதும், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் ஒன்றில் படித்துக் கொண்டிருக்கிறார் என்ப தும் தெரியவந்தது. மருத்துவர்கள் அவரைப் பரிசோ தனை செய்ததில், அவருக்கு இத யத்தில் காயம் ஏற்பட்டிருப்பதும், அதனால் ஏற்பட்ட இரத்தக்கசிவு காரணமாக இதயத்தின் செயல் பாடு வெகுவாக குறைந்து உயி ருக்கு ஆபத்தான நிலையில் இருப் பதும் கண்டறியப்பட்டது. தொடர்ந்து, மருத்துவர்கள், அவ ருக்கு முதலுதவி செய்து, பின்னர் அறுவை சிகிச்சை செய்வது என முடிவு செய்தனர். அதன்படி, கோவை அரசு மருத் துவக் கல்லூரி முதல்வர் ஏ.நிர் மலா தலைமையில், இதய அறுவை  சிகிச்சை துறை, மயக்கவியல் சிகிச்சை துறை, முதுகலை மருத் துவ படிப்பு மாணவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோர் கொண்ட மருத்துவக்குழுக்கள் இணைந்து, இந்த உயிர் காக்கும் அவசர அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். இதயத்தை சுற்றி  இருந்த இரத்தம் எடுக்கப்பட்ட தும், இதயம் சீராக துடிக்க ஆரம் பித்துள்ளது. காயப்பட்ட இடத்தை, துடித்துக் கொண்டிருக்கும் இதயத் தில் சரிசெய்வது என்பது மிகவும்  கடினமான காரியம் என்பதால், மயக்கமருந்து நிபுணர்களின் உதவி யுடன் இதயத்தை கட்டுப்படுத்தி இதயத்தில் இருந்த காயம் சரி செய்யப்பட்டது. உரிய நேரத்தில்  மருத்துவர்கள் துரிதமாக செயல் பட்டதால் அந்த இளைஞரின் உயிர்  காப்பாற்றப்பட்டு பூரண நலத்து டன் வீடு திரும்பினார்.