districts

img

கோவை அரசுப் பொருட்காட்சி: அமைச்சர் துவக்கி வைத்தார்

கோவை, மே 14- கோவை அரசுப் பொருட்காட்சி யினை அமைச்சர் மு.பெ.சாமிநா தன் சனியன்று துவக்கி வைத்து, அரங்குகளை பார்வையிட்டார். கோவை சிறைச்சாலை அணி வகுப்பு மைதானத்தில் அரசுப் பொருட் காட்சி சனியன்று துவங்கியது. இதனை தமிழ் வளர்ச்சி மற்றும் செய் தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநா தன் துவக்கி வைத்து, அரங்குகளை பார்வையிட்டார். அப்போது அமைச் சர் மு.பெ.சாமிநாதன் பேசுகையில், தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் மக் களுக்கு செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்கள் என அனைத்தி லும் மற்ற மாநிலங்களுக்கு வழி காட்டக்கூடிய வகையில், பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றோம். கொரோனா காலத் தில் பொதுமக்கள் கஷ்டப்படக்கூ டாது என்ற நோக்கத்தில் நியாய விலைக்கடைகள் மூலமாக 14 வகை யான மளிகைப் பொருட்கள் ஒவ் வொரு குடும்ப அட்டைதாரர்களுக் கும் வழங்கப்பட்டது. கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு வந்த முதல்வர்  மு.க.ஸ்டாலின் கவச உடையணிந்து, கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களுக்கான சிகிச்சை வார் டுக்கு நேரில் சென்று, அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்களிடம், நலம் விசா ரித்தார். மருந்து வசதிகள், ஆக்சி ஜன், படுக்கை வசதிகள், பரிசோ தனை முகாம்கள், தடுப்பூசி முகாம் கள் அதிகப்படுத்தப்பட்டன.

புதுமைப்பெண்கள் திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு  முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி சேரும் அனைத்து பெண் களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது, என்றார். இதைத்தொடர்ந்து சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 25 பய னாளிகளுக்கு ரூ.3.30 லட்சம் மதிப் பில் உதவித்தொகைகள், ஒரு பயனா ளிக்கு ரூ.1 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி, 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற 6 மாணவ, மாண வியர்களுக்கு கேடயங்களையும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங் கினார். முன்னதாக, வ.உ.சி மைதா னத்தில் உள்ள கப்பலோட்டிய தமி ழன் வ.உ.சிதம்பரனாரின் முழு உரு வச்சிலைக்கு அமைச்சர் மாலை அணி வித்து, மரியாதை செலுத்தினார்.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி யர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், ஆணை யர் மு.பிரதாப், துணை ஆணையர் ஷர்மிளா, மேற்கு மண்டல காவல்  துறை துணைத்தலைவர் விஜய குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.