கோவை, ஜூன் 10- கோவை அரசு கலைக் கல்லூரியில் ஆண்டு விழா வெள்ளியன்று கொண்டா டப்பட்டது. கோவை அரசு கலைக் கல்லூரியில் 21 ஆண்டுக ளுக்கு பிறகு கல்லூரியில் ஆண்டு விழா வெள்ளியன்று கொண்டாடப்பட்டது. இந்நி கழ்விற்கு கல்லூரியின் முதல்வர் வி.கலைச்செல்வி தலைமை வகித் தார். இதில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று உரையாற்றி னர். முன்னதாக, கல்லூரியில் சிறந்து விளங் கும் பல்வேறு துறைகளை சேர்ந்த மாண வர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் ஜி. எஸ்.சமீரன் பேசுகையில், கரகாட்டம், சிலம் பம் ஆகியவற்றை கோவை அரசு கல்லூரி மிகச்சிறப்பாக செய்ததாகவும், மாநில அள வில் அதிக மாணவர்கள் பயிலும் முதலி டத்தில் இருக்கும் கல்லூரி எனவும், கல்லூரி படிப்பை முடித்து சென்றாலும் கல்லூரியின் மீது பெருமை பட வேண்டும், என்றார். இதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.