districts

img

வரட்டாறு அணை தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு கோயம்புத்தூர்

தருமபுரி, ஏப்.18- அரூர் அருகே உள்ள வரட்டாறு அணைத் தேக்க்கத்திலிருந்து பாசனத் திற்காக திங்களன்று தண்ணீர் திறக்கப் பட்டது. தருமபுரி மாவட்டம்,அரூர் வட்டம், வள்ளிமதுரை கிராமத்தில் உள்ள பொதுப் பணித்துறை, நீர்வள ஆதார துறையின் கட்டுப்பாட்டில் வரட்டாறு நீர்தேக்கம் உள்ளது. இந்த அணைத் தேக்கத்திலி ருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டின் இடது மற்றும் வலது கால்வாய்களின் மூலம் 5 ஆயிரத்து 108 ஏக்கர் நிலங்கள் பயன்பெ றும் வகையில், தருமபுரி மாவட்ட ஆட்சி யர் ச.திவ்யதர்சினி பாசனத்திற்காக தண் ணீர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளு மன்ற  உறுப்பினர் டி.என்.வி.செந்தில்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ. சுப்பிரமணி, மேல்பெண்ணையாறு வடிநில கோட்டச் செயற்பொறியாளர் எஸ்.குமார் உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி கள், விவசாயிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.