districts

கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி!

சென்னை, ஏப். 30 - கோவை மக்களவைத் தொகுதி யில் பாஜக தலைவர் அண்ணாமலை படுதோல்வி அடைவது உறுதியாகி விட்ட நிலையில், தங்களுக்கு வாக்க ளிக்கும் 1 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக பாஜக-வினர் கூப்பாடு போட்டு வருகின்றனர். ஆனால், ஓட்டுபோட்டதற்கான அடை யாள மையுடன் அவர்கள் நடத்திய போராட்டம் மாபெரும் காமெடியாக மாறி விட்டது.

இந்நிலையில், ஆஸ்திரேலியா வில் மருத்துவராக பணியாற்றி வரும், கோவை  மாவட்டம் நஞ்சுண்டா புரத்தை சேர்த்த சுதந்திர கண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அதில், “நாடாளுமன்ற தேர்தலில்  வாக்களிக்க சென்றபோது, வாக்காளர் பட்டியலில் எனது பெயர் மற்றும் எனது மனைவி பெயர் நீக்கப்பட்டி ருப்பது தெரியவந்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்த லிலும், 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வாக்களித்த நிலையில், இந்த முறை எனது பெயரும், மனைவி பெயரும் நீக்கப்பட்டுள்ளது. அதே முகவரியில் வசிக்கும் எனது மகள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளது.

இதேபோல, எங்கள் பகுதி யை சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக் காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு ஏப்ரல் 15 அன்று  மின்னஞ்சல் மூலம் புகார் அளித்த போதும், நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. அதனால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து, வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அதுவரை கோவை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன் செவ்வாய்கிழமை (ஏப்.30) விசார ணைக்கு வந்தது. அப்போது, “ஜனவரியில் இறுதி  வாக்காளர் பட்டியல் வெளியிட்ட போது ஆட்சேபம் தெரிவிக்காதது ஏன்?” என மனுதாரருக்கு உயர் நீதி மன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் “வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலை யில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடி யாது” என கூறிய நீதிபதிகள், கோவை தேர்தல் முடிவை வெளி யிடுவதற்கு தடை விதிக்கக்கோரிய மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.