districts

கோவை: சடலத்தை மாற்றிக் கொடுத்ததால் பரபரப்பு

கோவை,டிச. 30- கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உடல்களை மாற்றி எடுத்துச் சென்று தகனம் செய்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.  ஈரோடு மாவட்டம், சூரம்பட்டி பகுதி யைச் சேர்ந்தவர் மணி (65). இவர் உடல்  நலக்குறைவால் கடந்த 5 நாட்களுக்கு  முன்பு கோவை அரசு மருத்துவம னையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்ட நிலையில், வியாழனன்று உயிரி ழந்தார். இவரது உடலை பிரேத பரி சோதனைக்கு பிறகு ஒப்படைப்பதாக உறவினர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் திருப்பூர் மாவட் டம் அவினாசி பாளையம் பகுதியில் உயி ரிழந்த மற்றொரு நபரின் உடலுக்கு பதில், தவறுதலாக மணியின் உடலை  மருத்துவமனை ஊழியர்கள் மாற்றி கொடுத்துள்ளதாக தெரிகிறது. அவர்க ளும் உடலைப் பெற்று கொண்டு இறுதிச் சடங்கிற்காக தங்களது சொந்த  ஊருக்கு எடுத்துச் சென்றனர். இந்நிலை யில் சடலத்தை மாற்றிக் கொடுத்தது ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மருத்து வமனை ஊழியர்களுக்கு தெரியவந் தது. இதுகுறித்து உடலை மாற்றி வாங்கிச் சென்றவர்களுக்கு தகவல் அளிக்க மருத்துவமனை ஊழியர்கள் செல்போனில் தொடர்பு கொள்ள முயற் சித்தனர். ஆனால் சடலத்தை பெற்றுச் சென்றவர்களை தொடர்பு கொள்ள முடி யாததால் சம்பவம் குறித்து பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.  புகாரை பெற்றுக் கொண்ட பந்தய  சாலை போலீசார், அவிநாசிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரி வித்து சடலத்தை மாற்றி பெற்றுச் சென் றவர்களை தொடர்பு கொண்டு தக வலை தெரிவித்தனர். இதனைக் கேட்டு  சடலத்தை மாற்றி பெற்றுச் சென்றவர் கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், மாற்றி பெற்றுச் சென்ற சடலம் தங்க ளது தந்தை என எண்ணி தகனம் செய்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதை யடுத்து இருதரப்பையும் அழைத்து  பேச்சு வார்த்தை நடத்திய போலீசார்,  ஒரே நாளில் உயிரிழந்த இருவரும், ஒரே மாதிரியான முகம் மற்றும் உடல மைப்பை கொண்டிருந்ததால், மருத்து வமனை ஊழியர்கள் சடலத்தை மாற்றி  கொடுத்து விட்டதாக விளக்கம் அளித்த னர். இதனை அடுத்து மணியின் அஸ் தியை அவரது உறவினர்கள் சுமார் 12  மணி நேரம் காத்திருந்து பெற்றுச் செல்லும் சூழல் ஏற்பட்டது. சடலத்தை மாற்றி வழங்கிய ஊழியர்களிடம்  இது குறித்து விசாரணை நடத்தப்ப டும் என மருத்துவமனை நிர்வாகம்  தெரிவித்துள்ளது. ஒரே மாதிரியான  உடல் அமைப்பால் சடலம் மாற்றி வழங் கப்பட்டு தகனம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.