districts

img

கோவை - மேட்டுப்பாளையம் ரயில் சேவை துவக்கம்

மேட்டுப்பாளையம், ஜூன் 20- கொரோனா கட்டுப்பாட்டால் குறைக் கப்பட்டிருந்த கோவை - மேட்டுப்பா ளையம் பயணிகள் ரயில் சேவை திங்களன்று இயக்கப்பட்டதால், பய ணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2020 ஆண்டு மார்ச் மாதத் தில் கொரோனா நோய் தொற்று அதிக ரித்த நிலையில் அதன் பரவலை கட்டுப் படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஏராளமான ரயில் சேவைகள் நிறுத்தப் பட்டன. அப்போது, மேட்டுப்பாளை யம் – கோவை மற்றும் கோவை – மேட் டுப்பாளையம் என தலா ஐந்து முறை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட் டது. கடந்தாண்டு கொரோனா பரவல்  ஓரளவு குறைந்த நிலையில் மேட்டுப் பாளையத்தில் இருந்து கோவைக்கு காலை ஒருமுறை கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு ஒரு முறை என பயணிகள் ரயில் இயங்க துவங்கி யது. இதன்பின் கொரோனா தொற்று  பெருமளவு குறைந்த நிலையில்,

இவ் வாண்டு துவக்கம் முதல் தலா இரண்டு  முறை என பயணிகள் ரயில் சேவை அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமை யாக தளர்த்தப்பட்டு அனைத்தும் வழக் கமான சூழலுக்கு திரும்பியுள்ள நிலை யில், கல்லூரி சென்று திரும்பும் மாணவ, மாணவியர், அரசு மற்றும் தனி யார் துறையில் பணிபுரிவோர் பிற தொழில் மற்றும் பணி நிமித்தமாக செல் லும் பயணிகள் வசதிக்காக முன்பு  இருந்த நடைமுறைப்படி மேட்டுப்பா ளையம் – கோவை – மேட்டுப்பாளை யம் இடையே பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இதையொட்டி திங்களன்று முதல் வழக்கம் போல் தலா ஐந்து முறை  (புறப்படும் மற்றும் வந்து சேரும் நேர மாற்றம் தவிர) என பயணிகள் ரயில் சேவை துவங்கும் என ரயில்வே நிர்வா கம் அறிவித்தது. இதன்படி, மேட்டுப் பாளையத்திலிருந்து கோவைக்கு காலை 8.20 மணி, 10.55 மணி, பகல் 1.05  மணி, மாலை 4.45 மணி, இரவு 7.15 மணிக்கு பயணிகள் ரயில் புறப்பட்டு கோவை செல்கிறது. அதேபோல் கோவையிலிருந்து காலை 9.35  மணி,  முற்பகல் 11.50 மணி, மதியம் 3.45 மணி, மாலை 5.55 மணி மற்றும் இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளை யம் வந்தடைகிறது. இதனால், ரயில் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந் துள்ளனர்.