திருப்பூர், மார்ச் 21- கொரோனா பெருந்தொற்று முதலாவது பொது முடக்கத்தின் போது நிறுத்தப்பட்ட கோவை - ஈரோடு பயணிகள் ரயில் இரண் டாண்டுகளுக்குப் பிறகு வரும் ஏப்ரல் மாதம் முதல் எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்கப்படுகிறது. கொரோனா முதலாவது பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட 2020 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி முதல் கோவை - ஈரோடு, ஈரோடு - கோவை பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு சரி யாக இரண்டு ஆண்டுகள் நிறை வடையும் நிலையில் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்த ரயில் இயக்கப்படுவதாக தென்னக ரயில் வேயின் சேலம் கோட்டம் அறிவித் துள்ளது. அதேசமயம் இந்த பயணிகள் (பாசஞ்சர்) ரயில் விரைவு (எக்ஸ் பிரஸ்) ரயிலாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறி வித்துள்ளது. இந்த ரயில் கோவை, வட கோவை, பீளமேடு, சிங்காநல் லூர், இருகூர், சூலூர் ரோடு, சோமனூர், வஞ்சிபாளையம், திருப்பூர், ஊத்துக்குளி, விஜய மங்கலம், ஈங்கூர், பெருந்துறை, தொட்டியபாளையம், ஈரோடு சந் திப்பு வரை இயக்கப்பட்டு வந்தது. அதேபோல் ஈரோடில் இருந்து கோவை சந்திப்பு வரையும் அதே வழித்தட ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று சென்று வந் தது. இதனால் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு சுற்று வட்டார கிரா மப்புறங்கள், புறநகர் பகுதிக ளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பயணிகள் தினசரி வேலைக்கு சென்று வர இந்த ரயில் பேருதவி யாக இருந்தது. மாதாந்திர பருவ கட்டண சீட்டு (சீசன் டிக்கெட்) மூலம் இதில் பலர் பயணித்து வந்தனர். தற்போது இயக்கப்படவுள்ள இந்த விரைவு ரயில் சிங்காநல்லூர் நிறுத்தம் தவிர மற்ற அனைத்து நிறுத்தங் களிலும் நின்று செல்லும். அதே சமயம் பயணிகள் ரயிலுக்கான பருவ கட்டணம் என்பது இனி மேல் விரைவு ரயிலுக்கான கட்ட ணமாக வசூலிக்கப்படும். இத னால் இந்த வழித்தடத்தில் பய ணிக்கும் அலுவலக ஊழியர்கள், பணியாளர்கள், தொழிலாளர்கள், மருத்துவமனைகளுக்குச் சென்று வருவோர் அனைவரும் ஏற்க னவே செலுத்தி வந்த கட்டணத் தைப் போல் இரண்டு மடங்காக கட்டணம் செலுத்தும் கட்டாயம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இரண்டு ஆண்டுகள் இடை வெளிக்கு பிறகு இந்த ரயில் இயக் கப்படுவது பலருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும், விரைவு ரயிலாக பெயர் மாற்றம் செய்து இரண்டு மடங்கு கட்டணம் வசூ லிக்கப்படும் என்ற அறிவிப்பு அதிருப்தியையும், ஏமாற்றத்தை யும் ஏற்படுத்தி உள்ளது. எனவே ஏற்கனவே இருக்கும் பயணிகள் ரயில் என்ற அடிப்படையிலேயே இந்த ரயிலை இயக்கி அதற்கான கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தி உள்ள னர்.