districts

img

கோவை: விபத்துகள் 10 சதவிகிதம் அதிகரிப்பு

கோவை, ஜூலை 28- கோவை மாவட்டத்தில் கொரோனா  தொற்றுக்கு முன்பு இருந்ததை விட, விபத்துகள் 10 சதவிகிதம் அதிகரித்துள் ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள் ளார். கோவை மாவட்டத்தில் பொதுமக் கள் தங்களது செல்போன்கள் தொலைந்து விட்டதாகவும், திருடப் பட்டு விட்டதாகவும் புகார் அளித்ததன் அடிப்படையில், ரூ.60 லட்சம் மதிப்பி லான 106 செல்போன்கள் மீட்கபட்டு, புத னன்று உரியவர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. கோவை ரயில்  நிலையம் அருகே உள்ள மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அலுவலகத்தில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.  இதனைத்தொடர்ந்து அவர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தவற விட்ட, திருடுபோன 106 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைத் துள்ளோம். கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை மொத்தம் 350 செல்போன்களை கண்டுபிடித்து ஒப்ப டைத்துள்ளோம். கடந்த ஏப்ரல் மாதம்  முதல் தற்போது வரை 149 போக்சோ  வழக்குகள் மீது குற்றப்பத்திரிகை தாக் கல் செய்துள்ளோம். 60 வழக்கு நீதி மன்றத்தில் உள்ளன. ஒன்பது வழக்கு களுக்கு தண்டனை பெற்றுக் கொடுத் துள்ளோம். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தீவிர நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறோம். குற்ற பத்திரிக்கை மூலம் குற்றவாளி களுக்குரிய தண்டனை கிடைக்குமா என் பதை ஆய்வு செய்து செயல்பட்டு வரு கிறோம்.

பள்ளிக்கூடம் திட்டத்தின் மூலம் 28  நாட்களாக பள்ளிகளில் போக்சோ தொடர் பான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகி றோம். இதுவரை 36 ஆயிரம் குழந்தை களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள் ளோம். மாணவர்கள் மத்தியில் பான் மசாலா, குட்கா போன்ற போதைப் பொருட் களை தடுக்கும் வகையில் 347 குற்ற வாளிகளை கைது செய்து 332 வழக்கு கள் பதிவு செய்து 3.5 டன் குட்கா பறி முதல் செய்துள்ளோம். பெட்டிக்கடை களில் பான்மசாலா விற்பனை அதிகரிப் பதை தடுக்க 125 கடைகள் மீது நடவ டிக்கை எடுத்து ஐந்து கடைகளுக்கு சீல்  வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் 126 கஞ்சா விற்பனை வழக் குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட் டுள்ளது. வலி நிவாரணி மருந்துகளை போதைக்கு பயன்படுத்துவது தொடர் பாக விற்பனையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் பரிந் துரை சீட்டு இல்லாமல் யாருக்கும் வலி நிவாரணி மருந்துகளை மருந்து கடை களில் விற்பனை செய்யக்கூடாது. குற்ற  வழக்குகளில் தொடர்புடைய 311 குற்ற வாளிகளை கைது செய்துள்ளோம். அவர்களிடமிருந்து ரூ.1 கோடியே 51 லட்சத்து 8 ஆயிரத்து 380 மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்துள் ளோம். மாவட்டம் முழுவதும் 10 ஆயி ரம் கண்காணிப்பு கேமராக்கள் உள் ளன. தொடர்ந்து கேமராக்கள் அமைக் கும் பணி நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்றுக்கு முன்பு இருந்ததை விட விபத்துகள் 10 சதவிகி தம் அதிகரித்துள்ளது. 387 விபத்துகள் நடைபெற்றுள்ளது. கடந்த 5 ஆண்டு களில் இரண்டு விபத்துக்கு மேல் ஏற் படுத்தியவர்களை கண்காணித்து 714 வண்டிகளை அடையாளம் கண்டு 286  கனரக வாகனங்களின் உரிமத்தை ரத்து  செய்ய பரிந்துரை செய்துள்ளோம். அதேபோல ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்ய நடவடிக்கை மேற் கொண்டு வருகிறோம், என்றார்.