கர்ப்பிணிக்கு ஆம்புலன்சில் பிரசவம் ஊழியர்களுக்கு பாராட்டு
கோவை, ஜூன் 14- பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணிக்கு ஆம்புலன்சி லேயே சுக பிரசவம் நடைபெற்றது. அவசரம் கருதி பிரச வம் பார்த்த ஊழியர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். கோவை மாவட்டம், அன்னூரை அடுத்த ஆம்போதி ஊராட்சி, நாச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதி சரவணா (25), துர்கா (23). நிறைமாத கர்ப்பிணியான துர்கா விற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நந்தகோபால், குமுதா ஆகியோர் துர்காவினை ஆம்புலன் சில் ஏற்றி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். இதற்கிடையே துர்காவிற்கு திடீரென பிர சவ வலி அதிகரித்துள்ளது. இதனால் அவசரம் கருதி ஆம்பு லன்ஸ் ஊழியர்கள் நடுவழியிலே வாகனத்தை நிறுத்தி பிரச வம் பார்த்துள்ளனர். இதில், 2 கிலோ 900 கிராம் எடையுடன் ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து மேட்டுப்பாளை யம் அரசு மருத்துவமனையில் சிகச்சைக்காக துர்கா அனு மதிக்கப்பட்டார். கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்ட திடீர் பிர சவ வலி அதிகரித்த காரணத்தால், அவசரம் கருதி பிரசவம் பார்த்த ஆம்புலன்சு ஊழியர்களை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
முதல்வர் குறித்து அவதூறு அண்ணாமலை மீது புகார்
கோவை, ஜூன் 14- தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பி வரும் பாஜக தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி திமுக நிர்வாகி அளித்த புகாரின்பேரில், கோவை பந்தய சாலை போலீசார் புகார் ஏற்புச்சான்றிதழ் வழங்கி யுள்ளனர். கோவை மாநகரம், பந்தையசாலை காவல் நிலையத் தில், ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்ற திமுக பிரமுகர் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தான் அரசியல் செய் வதற்காக தமிழக முதல்வரைப் பற்றி பல மேடைகளிலும், பொது இடங்களிலும் முன்னுக்குப்பின் தவறான செய்தி களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகிர்ந்து வரு கிறார். மேலும், தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச் சர்களையும் ஊழல்வாதியாக சித்தரித்து பேசி வருகிறார். ஒரு கட்சியின் தலைவராக உள்ள அண்ணாமலை, பத்தி ரிக்கை மற்றும் ஊடகங்களில் தவறாக பேசி வருவதை தடை செய்து உத்தரவிட வேண்டும். இவர் மீது கிரிமினல் நடவ டிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என அதில் தெரி விக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரகுநாத் அளித்த புகா ரில், பந்தையசாலை காவல் துறையினர் புகார் மனு ஏற்பு சான்றிதழ் (சிஎஸ்ஆர்) வழங்கியுள்ளனர்.
போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மண்மேடுகள் அகற்றம்
உதகை, ஜூன் 14- கூடலூர் - ஓவேலி சாலையில் போக்குவரத்துக்கு இடை யூறாக இருந்த மண்மேடுகள் பொக்லைன் எந்திரம் உதவி யுடன் அகற்றப்பட்டது. நீலகிரி மாவட்டம், கூடலூரிலிருந்து ஓவேலி பேரூராட்சி கிளன்வன்ஸ், ஆரோட்டுப்பாறை, பெரியசோலை, சீபுரம், காந்திநகர் உள்ளிட்ட இடங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதுதவிர ஏராளமான தனியார் ஜீப்பு கள், கார்கள் சென்று வருகிறது. இந்த சாலையில் அரசு மாதிரி மற்றும் தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி, மாணவர்க ளின் விடுதிகள், கூடலூர் கல்வி மாவட்ட அலுவலகம் மற் றும் ஏராளமான வீடுகள் உள்ளது. இதனால் காலை மற்றும் மாலை நேரத்தில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவி கள் பள்ளிக்கு சென்று வீடு திரும்புகின்றனர். இதன் காரண மாக கூடலூர் நகரில் இருந்து நகராட்சி அலுவலகம் வழியாக ஓவேலி சாலையில் மாணவர்கள் நடந்து செல்கின்றனர். மேலும், பேருந்துகள் மற்றும் வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அலுவலக வேலை நாட்களில் கடும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் சாலையோ ரம் போக்குவரத்து மற்றும் மாணவர்களுக்கு இடையூறாக உள்ள மண்மேடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண் டும் என நகராட்சி பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் நேரில் முறையிட்டனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதன்பின் கூடலூர் நகராட்சி அலுவலகம் முதல் ஓவேலி சாலையோரம் இருந்த மண்மேடுகளை பொக்லைன் எந்திரம் உதவியுடன் நெடுஞ் சாலைத்துறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் முன்பு இருந்ததை விட இச்சாலை அகலமாக மாறியது. இதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகள் சாலை யோரம் நடந்து செல்லும் வகையில் போதிய இடவசதி ஏற் பட்டது. போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மண்மேடு களை வெட்டி அகற்றியதால் சாலையோரம் நடந்து செல்வ தற்கு இடவசதி கிடைத்துள்ளது. மேலும், மண்மேடுகள் அகற் றிய இடத்தில் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பருத்தி ஏலம்
தருமபுரி, ஜூன் 14- தருமபுரி மாவட்டம், அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத் தில் திங்களன்று பருத்தி ஏலம் நடைபெற்றது. அரூர், கடத்தூர், பொம்மிடி, கம் பைநல்லூர், கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளி லிருந்து 534 விவசாயிகள், 4 ஆயிரம் பருத்தி மூட்டை களை ஏலத்திற்கு எடுத்து வந்தனர். இதில், ஆர்சிஎச் ரகம் பருத்தி குவிண்டால் ஒன்றிற்கு ரூ 9,499 முதல் ரூ.11,499 வரை ஏலம் போனது. மொத்தமாக ரூ. ஒரு கோடியே 34 லட்சத் திற்கு பருத்தி ஏலம் நடை பெற்றத்தாக ஏல நிர்வாகி கள் தெரிவித்தனர்.
புகழ்பெற்ற உதகை குதிரை பந்தயம் ரத்து
உதகை, ஜூன் 14- உதகையில் நடைபெற்று வரும் புகழ் பெற்ற குதிரை பந்தயம் ரத்து செய்யப் பட்டுள்ளதாக மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வா கிகள் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகையில் கடந்த 1905 ஆம் ஆண்டு முதல் புகழ்பெற்ற குதிரை பந்தயம் நடைபெற்று வருகிறது. இந்நிலை யில், நடப்பாண்டில் உதகையில் குதிரை பந்தயம் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதியன்று தொடங்கியது. இப்போட்டியில் கலந்து கொள்ள பெங்களூரு, மும்பை, ஐதராபாத், சென்னை, புனே போன்ற இடங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட குதிரைகள் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டன. தின மும் காலை, மாலையில் குதிரைகளுக்கு நடைபயிற்சி அளிக்கப்பட்டது. 7 வெளியூர் பயிற்சியாளர்கள் உட்பட 30 குதிரை பயிற்சி யாளர்கள் மற்றும் 30 ஜாக்கிகள் பங்கேற்ற னர். இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி தீவிர மாக பெய்து வருவதால், உதகையில் உள்ள குதிரை பந்தய மைதான ஓடுதளம் சேதம டைந்தது. இதனால் நீலகிரி தங்ககோப்பை போட்டி உட்பட மீதமிருந்த பந்தயங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் தெரிவித் துள்ளது.
புல்டோசர் அரசியல் - தமுமுக ரயில் மறியல்
கோவை, ஜூன் 14- உத்தர பிரதேச மாநில பாஜக அரசு முன் னெடுக்கும் புல்டோசர் அரசியலை கண் டித்து கோவையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற் பட்டது. பாஜக நிர்வாகிகள் நூபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசினர். இதை கண் டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடை பெற்று வருகிறது. இந்நிலையில், பாஜக ஆட்சி நடைபெற்று வரும் உத்தரபிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தியபோது, அதில் கலந்து கொண்டவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியும், கைது நடவடிக்கை மேற்கொண் டனர். மேலும், சில இடங்களில் புல்டோசர் களை வைத்து இஸ்லாமியர்களின் வீடு கள் திட்டமிட்டு தகர்க்கப்பட்டது. இத்தகைய பாஜகவின் மதவெறுப்பு அர சியலை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன் னேற்ற கழகத்தினர் கோவையில் ரயில் மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அத னைத்தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர்.