districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

திருப்பூர் மாவட்டத்துக்கு உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் நியமனம்

திருப்பூர், பிப்.5 - நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி திருப்பூர் மாவட் டத்துக்கு  உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் நியமிக்கப் பட்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைமுறை அமலுக்கு வந் துள்ள  நிலையில் திருப்பூர் மாவட்ட தேர்தல் பார்வையா ளராக, சுரங்கம் மற்றும் கனிமங்கள் துறை இயக்குநர் எல். நிர்மல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, தேர்தல் பார்வையாளரின் அலைபேசி எண்: 95663 88446, தேர்தல் கட்டுப்பாட்டு அறை அலைபேசி எண்: 1800 425 7023 அறிவிக் கப்பட்டுள்ளது.திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டு கள், 6 நகராட்சிகளில் 147 வார்டுகள் மற்றும் 15 பேரூராட்சி களில் 233வார்டுகளில் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இம்மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 5 கி.மீ சுற்றளவு முழுவதும் மாதிரி நன்நடத்தை விதிகள் அமலுக்கு வருகிறது.தேர்தல் நடத்தை விதிகள் அமலாவதை தேர்தல் பார்வையாளர் கண்கா ணிப்பார். இப்பகுதிகளில் நடத்தை விதிகள் பின்பற்றப் படாவிட்டால் அது தொடர்பான புகாரினை மேற்காணும் அலுவலரை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று  மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர்எஸ்.வினீத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் அலுவலர்கள் நியமனம்

மேலும், இத்தேர்தலையொட்டி 1830 மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும், 6350 அலுவலர்கள், 1500 பணியாளர்கள், 1450 காவல் துறை அலுவலர்கள், 225 பறக்கும் படை அலுவலர்கள் மற்றும் 50 கண்காணிப்பு அலுவலர்கள் உள்ளிட்டோர் நகர்ப்புற உள் ளாட்சி தேர்தலில் பணியாற்றிட நியமனம் செய்யப்பட்டுள் ளனர் என்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியரகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட பணம் பறிமுதல்

அவிநாசி,  பிப்.5- அவிநாசி அருகே வாகனச் சோதனையில், உரிய ஆவண மின்றி கொண்டு வரப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட் டது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்கா ளர்களுக்கு பண விநியோகம் மற்றும் பொருட்கள் வழங்கு வதை தடுக்க மாவட்டந்தோறும் பல்வேறு பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு, வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே அதிகாலை நேரத்தில் வந்த  நான்கு சக்கர வாகனத்தை சோதனையிட்டபோது, 13  லட்சத்து 32 ஆயிரம் பணம் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து, பேரூராட்சி நிர்வா கத்திடம் ஒப்படைத்தனர்.

யூடியூப் வீடியோவை பார்த்து கொள்ளை முயற்சி – ஒருவர் கைது

ஈரோடு,பிப்.5- சத்தியமங்கலம் கடைவீதி பகுதியில் உள்ள நகைக் கடையில் யூடியூப் வீடியோவை பார்த்து கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் கடைவீதி பகுதி யில் பத்ரிநாதன் என்பவருக்கு சொந்தமாக கன்னிகா ஜுவல் லரி என்ற நகை கடை உள்ளது.  இந்நிலையில் இக்கடை யின் பக்கவாட்டு சுவற்றில் துளையிட்டு உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடிக்க மர்ம நபர் ஒருவர் முயற்சி செய்துள்ளார். இதனை அருகே வசிக்கும் நபர் பார்த்து கூச்சலிடவே மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதன்பின் இக்கொள்ளை சம்பவம் குறித்து கடை உரிமை யாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சத்தியமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.  இந்நிலையில்  கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக கரூர் மாவட்டம், கட்டளை கிருஷ்ணராயபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜபாண்டி என்ற இளைஞரை வியாழனன்று புளி யம்பட்டி அருகே சத்தியமங்கலம் காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். இதில், அந்நபர் தனியார் நூற்பாலை யில் வேலை செய்து வருவதாகவும், யூடியூப் வீடியோவை பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அவர் தெரி வித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சிபிஎம் வேட்பாளர்களுக்கு சிஐடியு டெபாசிட் வழங்கல்

திருப்பூர், பிப். 5 - திருப்பூரில் சிபிஎம் வேட்பாளர்களுக்கு சிஐடியு சார்பில் டெபாசிட் தொகை வழங்கி வாழ்த்து தெரிவித்த னர். திருப்பூர் மாநகராட்சி 1 மற்றும் 9ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கான டெபாசிட் தொகையை சிஐ டியு கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சங்கம் வழங்கி யது. 1ஆவது வார்டு மார்க்சிஸ்ட் கட்சி வேட்பா ளர் ஜி.மீனாட்சிக்கும், 9 ஆவது வார்டில் போட் டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் கா.வசந்திக்கும் கட்டிட கட்டுமானத் தொழி லாளர் சங்கத்தினர் டெபாசிட் தொகையை வழங்கினர். திருப்பூர் 14ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.கவி தாவுக்கு சிஐடியு பாத்திரத் தொழிலாளர் சங்கம் மற்றும் திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர் சங்கத்தினர் வழங்கி வாழ்த்து தெரி வித்தனர்.

லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் கைது

கோவை, பிப்.5-  கோவை வடக்கு வட்டாட்சியர் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப் பட்டார். கோவை பாலசுந்தரம் சாலையில் வடக்கு வட்டாட்சியர் அலுவலகம் உள் ளது. இங்கு கோகிலா மணி என்பவர் வட்டாட் சியராக இருந்து வருகிறார். கடந்த சில நாட்க ளுக்கு முன்பு சான்றிதழ் பெற வந்த நபரி டம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதைதொடர்ந்து சான்றிதழ் கோரிய நபர் லஞ்ச ஒழிப்புத் துறையை அணுகி உள்ள னர். இதன்பின் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரசாயனப் பொடி தடவிய ரூ.25 ஆயிரத்தை கொடுத்து அனுப்பியுள்னர். இதை கோகி லா மணி பெற்றுக் கொண்டபோது மறைந்தி ருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்த னர்.

ஈரோடு மாநகராட்சியில்: 5 நாட்களில்  ரூ.59 லட்சம் நிலுவை வரி வசூல்

ஈரோடு, பிப்.5- ஈரோடு மாநகராட்சி பகுதியில் 5 நாட்களில் ரூ.59 லட்சம் நிலுவை வரி வசூல் செலுத்தப்பட்டதாக மாநகராட்சி அதிகா ரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக, 4 மண்டல அலுவல கங்கள், மாநகராட்சி மைய அலுவலகம், வீரப்பன்சத்திரம் அலுவலகம் என 6 இடங்களில் கடந்த 29ஆம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. இந்நிலையில், மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பா ளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது தங்களு டைய சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரி இனங்கள் 100 சதவிகிதம் செலுத்தி வரி நிலுவை இல்லா சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்றும், அதனை வேட்புமனு தாக்க லின்போது கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று அறிவு றுத்தப்பட்டிருந்தது. இதனை அடுத்து மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பா ளர்கள் பலர் மாநகராட்சியில் செலுத்த வேண்டிய நிலுவை வரியை கடந்த சில நாட்களாக செலுத்தி வருகின்றனர். இதன்படி கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி முதல் கடந்த 2ஆம் தேதி வரை 5 நாட்களில் மட்டும் ரூ.58 லட்சத்து 96 ஆயி ரம் நிலுவை வரி செலுத்தப்பட்டதாக மாநகராட்சி அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.

இளைஞர் மீது தாக்குதல் - கைது

தாராபுரம், பிப்.5- தாராபுரத்தில் குடும்ப தகராறில் தொழிலாளியை தாக்கி யவர் கைது செய்யப்பட்டார். பழனி சாமிநாதபுரத்தை பகுதியை சேர்ந்தவர் ரங்க ராஜன் (42). இவருக்கு வெண்ணிலா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கண வன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ரங்க ராஜனை பிரிந்த வெண்ணிலா, தாராபுரம் அடுத்த தளவாய் பட்டிணம் சென்னாக்கல்பாளையத்தில் வசித்து வரும் தனது அண்ணன் மகேஷ் (34) வீட்டிற்கு வந்துவிட்டார்.  இந்நிலையில், வெண்ணிலாவின் அண்ணன் மகேஷ் கோவிலுக்கு சென்றுவிட்டு தாராபுரம் உடுமலை சாலை யில் இருசக்கர வாகனத்தில் வந்தபோது அவரை வழி மறித்து ரங்கராஜன் மற்றும் அவரது நண்பர்கள் ரகு (35) ராதாகிருஷ்ணன் (34) ஆகியோர் சேர்ந்து இரும்பு கம்பி யால் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் காயமடைந்த மகேஷ் தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத் துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரு கிறார். இச்சம்பவம் குறித்து அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரங்கராஜனை கைது செய்தனர். மேலும் தலை மறைவாக உள்ள ரகு மற்றும் ராதாகிருஷ்ணனை தேடி வரு கின்றனர்.

பெண்ணை எரித்து கொன்ற பெண் கைது

தருமபுரி, பிப்.5- ஏரியூரை அடுத்த சிடுவம் பட்டி மாரியம்மன் கோயில் அருகே சொத்துக்காக கண வனின் முதல் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொன்ற பெண்ணை காவல் துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், பென் னாகரம் அருகே உள்ள சிடு வம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் கிருஷ்ணன் (75), இவருக்கு இரண்டு மனைவி கள் உள்ளனர். முதல் மனைவி ரஞ்சிதம் (70), இவ ருக்கு குழந்தைகள் இல்லை.  இவரது இரண்டாவது மனைவி ராணி (எ) ரம்யா வுக்கு (45), ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலை யில் முதல் மனைவி ரஞ்சி தம் பெயரில் இருந்த சுமார் இரண்டு ஏக்கர் நிலத்தை தங்கள் பெயருக்கு எழுதி வைக்கும் படி ராணி (எ)  ரம்யா கேட்டுள்ளார். அதற்கு ரஞ்சிதம் மறுப்பு தெரிவித் ததால் ஆத்திரமடைந்த ராணி வீட்டில் இருந்த மண் ணெண்ணையை எடுத்து வந்து ரஞ்சிதம் மீது  ஊற்றி தீ பற்ற வைத்ததாக கூறப்படு கிறது.  இவரை அருகில் வசிப்ப வர்கள் மீட்டு 108 ஆம்பு லன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்துள்ளன. இதனை தொடர்ந்து 80 சதவிகித தீக் காயங்களுடன் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ரஞ்சிதம் சிகிச்சை பலனின்றி பரிதாப மாக உயிரிழந்தார் . இந்த சம் பவம் தொடர்பாக ஏரியூர் காவல்துறையினர், ராணி  என்ற ரம்யாவை கைது செய்து சிறையில் அடைத்த னர்.

கோவையில் பேருந்து மோதி  தந்தை, மகன் பலி

கோவை, பிப்.5- கோவையில் மகன்களை பள்ளிக்கு அழைத்துச் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜெபஸ் ஸ்டின் சாமுவேல் (40). இவர் தனது 8 ஆம் வகுப்பு படிக் கும் மகன் கிளாரின் (13) மற்றும் 1 ஆம் வகுப்பு படிக்கும் மகன் பிராங்க்ளின் (5) ஆகியோரை வெள்ளியன்று காலை  தனது இருசக்கர வாகனத்தில் ஒண்டிப்புதூரில்  உள்ள  தனியார் பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க வாக னத்தை திருப்பியபோது இருசக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி மூவரும் கீழே விழுந்தனர். அச்சமயம் பின் னால் வந்த அரசு பேருந்து இவர்கள் மீது ஏறியதில் ஜெபஸ் டின் சாமுவேல் மற்றும் அவரது மகன் கிளாரின் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த னர். பிராங்களின் காயமடைந்தார்.  இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிங்காநல்லூர் காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து பிரிவு காவலர் கள் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த பிராங்கிளின் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர். மகன்களை பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது விபத் தில் சிக்கி தந்தை, மகன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.