districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கடன்களை செலுத்த கால நீட்டிப்பு  மண்டல இணைப்பதிவாளர் தகவல்

ஈரோடு, டிச.19-  ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ஏ.விஜயசக்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:  ஈரோடு மண்டலத்தில் செயல்பட்டு வரும் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி களில் 2014 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி அன்று தவணை தவறிய பண்ணை சாரா கடனுக்கான ஒரு  முறை கடன் தீர்வுத் திட்டம் செயலாக்க காலம் டிச.31 ஆம் தேதியன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மண்டலத்தில் 24 நபர்கள் அசல் ரூ.6.90 லட்சம் மற்றும் வட்டி ரூ.6.31 லட்சம் என மொத்தம்  செலுத்த வேண்டிய தொகை ரூ.13.21 லட்சம் அர சாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக் குட்பட்டு ஏற்கனவே 25 சதவீதம் செலுத்தியுள்ள கடன் தாரர்கள், மீதமுள்ள 7.5 சதவீத தொகையை செலுத்து வதற்கு ஏதுவாகவும், இதுவரை இந்த திட்டத்தில் சேராததவர்கள் உடனடியாக திட்டத்தில் சேர்ந்து, ஒரே தவணையில் முழுமையாக சம்பந்தப்பட்ட தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி களில் கடனைத் திருப்பிச் செலுத்தி பயனடையுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியர்

சின்னாளப்பட்டி, டிச.19- திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே செங்கட் டான்பட்டியில் அரசினர் நடுநிலைப்பள்ளியில் மாணவி களை கழிவறைகளை சுத்தம் செய்யச் சொல்லி பள்ளியின் தலைமை ஆசிரியை சுகுமாரி மாணவிகளை வற்புறுத்திய தால் ஒருவாரகாலமாக மாணவிகள் கழிவறைகளை சுத்தம் செய்து வந்ததாக மாணவிகள் பெற்றோர்களிடம் தெரி வித்துள்ளனர்.  இதில் ஒவ்வாமை ஏற்பட்டு மாணவிகள் உணவருந்த  முடியவில்லை எனக் கூறப்படுகிறது. அதே சமயத்தில் ஒரு மாணவி உடல்நலம் பாதிக்கப்பட்டு வத்தலக்குண்டு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள்  தரப்பில் கூறப்படுகிறது. மேலும் பள்ளியில் பணியாற்றும் மற்றொரு ஆசிரியரான ஸ்டீபன் என்பவர் அவர் கொண்டு வரும் உணவுப் பாத்திரங்களை சாப்பிட்ட பின்பு கழுவச் சொல்லி வற்புறுத்துவதாகவும் மறுத்தால் மிரட்டுவதாக வும் கூறப்படுகிறது. இதனையடுத்து பெற்றோர்கள் பள்ளி யை வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் காத்திருப்புப் போராட்டமாக மாறியுள் ளது. இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்  என கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், அரசு பள்ளிகளில் தூய்மைப் பணியாளர் களை முறையாக பணியமர்த்திட வேண்டும். மாணவர்களை  கழிவறையை சுத்தம் செய்ய வைத்த பள்ளி தலைமையாசிரி யரையும், டிபன் பாக்ஸை சுத்தம் செய்யச் சொன்ன ஆசிரிய ரையும் பணி நீக்கம் செய்திட வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

முட்டை விலை மேலும் 5 காசு உயர்வு

நாமக்கல், டிச.19- கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு நெருங்கி வருவதால் கேக் தயாரிக்க முட்டை அதிக அளவில் தேவைப்படுகிறது. இத னால் தமிழகத்தில் முட்டை விற்பனை அதிகரித்து உள் ளது. நாமக்கல் மண்டலத்தில் ரூ.4.90 ஆக இருந்த முட்டை கொள்முதல் விலை கடந்த 2 நாட்களுக்கு முன்பு 10 காசு உயர்த்தப்பட்டு ரூ.5 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், ஞாயி றன்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கி ணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலை மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டது. அதன்படி  முட்டை கொள்முதல் விலை  ரூ.5.05 ஆக உயர்ந்தது.