திறந்த வெளியில் மது அருந்துவதை கண்டுகொள்ளாத காவல்துறை பொதுமக்கள் முகம்சுழிப்பு
இளம்பிள்ளை, ஜூன் 30- சேலம் இடங்காணசாலை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் திறந்த வெளியில் மது அருந்திவிட்டு தகறாறு நடப்பது அன்றாட வழக்கமாய் மாறியுள்ளது. இதனை காவல்துறை கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின் னர். சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சிக்கு உட் பட்ட இளம்பிள்ளை பேருந்து நிலையத்தின் அருகே இளம்பிள்ளை-சின்னப்பம்பட்டி பிரதான சாலையில் அடுத்த டுத்து அரை கி.மீ தூரத்தில் மூன்று டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தினமும் ஏராளமா னோர் மது வாங்கி பிரதான சாலையோரமாக கூட்டம் கூட்ட மாக அமர்ந்து மதுவை அருந்துகின்றனர். போதை தலைக்கே றியதும் அந்த வழியாக செல்லும் பெண்களிடமும், பள்ளி, கல் லுாரி செல்லும் மாணவிகளிடம் தகராறு செய்வதும், ஒருவருக் கொருவர் தாக்கிக்கொள்வதும் தொடர்ந்து நடைபெறுவ தாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இருப்பினும் காவல் துறையினர் கண்டுகொள்வதில்லை என்று பொதுமக்கள் குற் றம்சாட்டுகின்றனர். மேலும், மது போதையில் சாலையில் குறுக்கும் நெடுக்குமாக நடப்பதால் அடிக்கடி விபத்து சம்ப வங்கள் நடக்கின்றன. இரவு நேரங்களில் அருகில் உள்ள வீடுகளின் கதவுகளை தட்டி இங்கு மது கிடைக்குமா என கேட்பதால் குடியிருப்பவர்கள் ஒருவித அச்சத்தில் உள்ளனர். எனவே, திறந்த வெளியில் மது அருந்துபவர்கள் மீது மகுடஞ் சாவடி காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ள னர்.
தமிழ்நாடு நாள் பேச்சுப்போட்டிகள்
ஈரோடு, ஜூன் 30- தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக் கான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ஜூலை 18-ஆம் நாள் தமிழ் நாடு நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதன்படி வரும் 6.7.2022 புதன்கிழமையன்று ஈரோடு கலைமகள் கல்வி நிலை யத்தில் காலை 10 மணி முதல் பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில், தமிழ்நாடு உருவான வரலாறு, மொழிவாரி மாகாண மும், தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும், தமிழ்நாட் டிற்காக உயிர் கொடுத்த தியாகிகள், பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாடு, சங்கரலிங்கனாரின் உயிர்த்தியா கம், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் தந்தை பெரியார், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் மா.பொ.சி, சட்டமன்றத் தில் ஒலித்த தமிழ்நாடு, எல்லை போர்த் தியாகிகள், முத்தமிழறி ஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு ஆகிய தலைப்புக ளில் இப்போட்டிகள் நடைபெறும். இதில் வெற்றிபெற்றவர் களுக்கு ரூ.10,7,5 ஆயிரங்கள் முறையே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா குறித்து விழிப்புணர்வு
தருமபுரி, ஜூன் 30- தமிழக அரசு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனை வரும் முகக்கவசம் அணிய வேண்டும். அணியாதவர்க ளுக்கு ரூ.500 அபராதம் விதிக் கப்படும் என அறிவிப்பு வெளி யானதை அடுத்து தருமபுரி நகரப்பகுதியில் போக்கு வரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி னர். மேலும், கட்டாயம் தனி மனித இடைவெளியை கடை பிடிக்க வேண்டும். முகக் கவசம் அணிந்து அரசிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண் டும் என்றனர்.
வேன் மோதி கல்லூரி மாணவன் பலி
அவிநாசி, ஜூன் 30- அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் அன்னூரைச் சேர்ந்த கல்லூரி மாணவன் புதனன்று உயிரிழந்தார். திருப்பூர் 15.வேலம்பாளையம் செட்டியார் வீதியைச் சேர்ந்த கமலநாதன் மகன் மணிகண்டன் (19). அன்னூர் தனி யார் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வந்தார். இந்நிலை யில், மணிகண்டன் தனது நண்பர்களான விவேக், சஞ்சய் ஆகி யோருடன் அன்னூரில் இருந்து திருப்பூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் அவிநாசி வெள்ளியம்பாளையம் அருகே வரும் போது, அவிநாசியில் இருந்து கருவலூர் நோக்கி அதிவேக மாகச் சென்ற வேன், இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த மணி கண்டன் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்து அவிநாசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, வேன் ஓட்டுநர் கோவை வெள்ளாங்கிணறு அண்ணா வீதியைச் சேர்ந்த தினேஷ்குமார்(30) என்பவரைக் கைது செய்தனர்.
வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைது
அவிநாசி, ஜூன் 30- அவிநாசி பகுதியில் தொடர்ந்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்த இரு நபர்களை காவல்துறையினர் புதன்கிழமை கைது செய்தனர். அவிநாசி பகுதியில் சங்கிலி பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதைதொ டர்ந்து அவிநாசி மேட்டுப்பாளையம் சாலையில் காவல்துறை யினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் சந்தேகமானவிதத்தில் வந்த நபர் களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், கோவை பீளமேடு லட்சுமிபுரம் முருகன் மகன் சரவணன் (24), சித்தா புதூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (32), ஆகியோர் அவிநாசி யில் நடைபெற்ற 3 சங்கிலி பறிப்பு வழக்குகளில் தொடர் புடையவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவி நாசி காவல்துறை வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து ஐந்தரை பவுன் நகைகள் மற்றும் இரு சக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது.
பள்ளிவாசலுக்கு சீல் வைக்க முயற்சி இஸ்லாமியர்கள் மறியல்; போக்குவரத்து பாதிப்பு
திருப்பூர், ஜூன் 30 - திருப்பூர் 15 வேலம்பாளையம் அருகே மகாலட்சுமி நகரில் பள்ளிவாசலுக்கு காவல் துறை பாதுகாப்புடன், மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்க முயற்சித்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இஸ்லாமியர்கள் நகரின் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி மகாலட்சுமி நகர் பள்ளிவாச லுக்கு சீல் வைப்பதக கூறி முதல் மண்டல உதவி ஆணையர் சுப்பிரமணியம் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் வியா ழக்கிழமை காலை அங்கு சென்றனர். இவர்களுடன் பாது காப்புப் பணிக்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பள்ளிவாசலுக்கு சீல் வைக்கும் முயற்சிக்கு அங்கிருந் தோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அத்துடன் இது தொடர் பாக தகவல் பரவிய நிலையில் அனுப்பர்பாளையம் புதூர், பூலுவபட்டி பிரிவு, மாநகராட்சி அலுவலகம், காங்கேயம் சாலை, மங்கலம் நால் ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் எதிர்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் ஈடு பட்டனர். பல்வேறு பகுதிகளிலும் மறியல் தொடங்கிய நிலையில் நகரெங்கும் பிரதான சாலைகளில் போக்குவரத்து கடுமை யாக பாதிக்கப்பட்டது. இப்பிரச்சனை பதற்றம் ஏற்படுத்திய நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய், மாநகர வடக்கு துணை ஆணையர் அபினவ்குமார் ஆகியோர் மகாலட்சுமி நகர் பள்ளிவாசலுக்குச் சென்று அங்கிருந்த நிர் வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் இஸ்லா மியர் தரப்பு வழக்கறிஞர்கள் அவசர வழக்காக முறையிட்டு நீதிபதி மகாதேவன் முன்னிலையில் ஏற்கப்பட்டது. திங்க ளன்று வரை கால அவகாசம் வழங்கி சீல் வைக்கும் பணியை நிறுத்த உத்தரவிடப்பட்டது. இதையடுத்து பள்ளிவாசல் பகுதியில் இருந்து அதிகா ரிகள் சீல் வைக்கும் முடிவை கைவிட்டனர். நீதிமன்ற உத்தரவு தகவல் வந்த நிலையில் பல்வேறு பகுதிகளிலும் மறியலில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.
ரூ.48லட்சத்து 27ஆயிரத்துக்குப் பருத்தி ஏலம்
அவிநாசி, ஜூன் 30- அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் பருத்தி ஏலம் நடை பெற்று வருகிறது. புதனன்று, அவிநாசி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடை பெற்ற பருத்தி ஏலத்திற்கு மொத்தம் 2007 பருத்தி மூட்டை கள் வந்திருந்தன. மேலும் ஆத்தூர், மேட்டூர், கோபி, நம் பியூர், மலையப்பாளையம், சத்தியமங்கலம், கொள்ளே கால், அந்தியூர், அத்தாணி, அவிநாசி, புளியம்பட்டி, குன்னத் தூர் ஆகிய பகுதிகளிலிருந்து 422 பருத்தி விவசாயிகள் பங் கேற்றனர். இதில், ஆர்.சி.எச். பி.டி. ரகப்பருத்தி குவிண்டால் ஒன் றுக்கு ரூ. 6500 முதல் ரூ.9807 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2000 முதல் ரூ.4000 வரையி லும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 48லட்சத்து 27ஆயி ரத்துக்குப் பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்றது. இந்த ஏலத்தில், கோவை, ஈரோடு பகுதியிலிருந்து 23 பருத்தி வியாபாரிகள் பங்கேற்றனர்.
பாலியல் புகார் கமிட்டி அமைப்பு: அமைச்சர் கீதாஜீவன்
அவிநாசி, ஜூன் 30- பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் 2013-ஐ தீவிரமாக செயல்படுத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழகம் எங்கும் பாதுகாப்பு பெட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே அணைப்புதூர் பகுதியில் அமைந்துள்ள ஐ கே எப் அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், பெண்கள் பாலியல் ரீதியான புகார் தெரி விக்கும் வகையில் புகார் பெட்டியை முதல் முறையாக அறிமுகம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது, நிறு வனங்களில் நான்கு பேர் கொண்ட உள்ளக கமிட்டி அமைக்க வேண்டும். இந்த பாது காப்பு பெட்டியில் போடப்படும் புகார்கள் குறித்து உள்ளக கமிட்டி உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும். அப்படி உள்ளக கமிட்டி அமைக்காவிட்டாலோ அல் லது புகார் மீது உள்ளக கமிட்டி நடவடிக்கை எடுக்காவிட்டாலோ பாதிக்கப்பட்ட பெண் கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க லாம். உடனடியாக நடவடிக்கை மேற்கொள் ளப்படும். தவறு செய்த நபர் மீது சட்ட நடவ டிக்கை எடுப்பதோடு சம்பந்தப்பட்ட நிறுவ னத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் பணிக்கு செல்லும் பெண்க ளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுக்கப் படும் என நம்புகிறோம். மேலும் பெண்கள் பய மின்றி அதிகளவில் பணிக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். நிர்ணயிக்கப்பட்ட ஊதி யத்தைவிட குறைவாக ஊதியம் வழங் கப்பட்டால், அது குறித்து புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக முதல்வர் துவக்கிவைத்த ஊட்டச் சத்தை உறுதி செய்கின்ற திட்டத்தின் கீழ் இதய நோய், காது கேளாமை உள்ளிட்ட பல் வேறு குறைபாடுகள் கொண்ட 43ஆயிரத்து 796 குழந்தைகள் கடந்த ஒரு மாதத்தில் கண்ட றியப்பட்டு 36 ஆயிரத்து 96 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. மீத முள்ள குழந்தைகளுக்கு உயர் சிகிச்சை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2021 கொரோனோ தொற்றிற்குப் பிறகு உழைக்கும் பெண்களின் எண்ணிக்கை 2.3 சதவீதம் உயர்ந்துள்ளது. மூன்றாவது அலை யில் தொழில் நிறுவனங்கள் மீது நாளொன் றிற்கு போடப்பட்டிருந்த 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு முதல்வர் நல்ல முறையில் தீர்வு கண்டார். இதனால் டீக்கடை கள் உள்ளிட்ட எந்த தொழில் நிறுவனங்க ளும் மூடப்படாமல் மீண்டு வந்தோம், இனி யும் அலைகள் வந்தாலும் பாதிப்பின்றி மீண்டு வரலாம். அனைத்து மகளிர் விடுதிகளிலும் உரிய வசதி உள்ளதா என ஆய்வு செய்து பெண்கள் பாதுகாப்பு மற்றும் வசதிகள் உறுதிப்படுத் தப்படும்.இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில் அமைச்சர் மு.பெ. சாமிநா்தன், அமைச்சர் கயல்விழி செல்வ ராஜ் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்ட னர்.
காணாமல் போன மாணவர் மரணம்
உதகை, ஜூன் 30- நீலகிரி மாவட்டம், எம ரால்டு அருகே உள்ள தென் பழனி நகரைச் சேர்ந்தவர் முருகன் மகன் விஷ்ணு (17). இவர் 12 ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்று உதகை அரசு கலைக்கல்லூரியில் இள நிலை பட்டப்படிப்பு படிக்க விண்ணப்பித்துள்ளார். இந் நிலையில், கடந்த ஜூன் 27 ஆம் தேதியன்று மாலை 5.30 அளவில் வெளியே சென்று விட்டு வருவதாக கூறி சென்ற வர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது பெற் றோர், உறவினர்களின் வீடு கள் மற்றும் அக்கம் பக்கத் தில் தேடினர். ஆனால், அவரை காணவில்லை. இந்நிலை யில், வியாழனன்று எமரால்டு அணை அருகே தேங்கி இருந்த தண்ணீரில் விஷ்ணு உயிரிழந்த நிலையில் கிடந் தார். இதுகுறித்த தகவலின் பெயரில் எமரால்டு காவல் துறையினர் சம்பவ இடத் திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக் காக உதகை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வை விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
பூங்கா வருபவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் நீலகிரி மாவட்ட நிர்வாகம் உத்தரவு
உதகை, ஜூன் 30- உதகையில் உள்ள பூங்காக்களில் முகக்கவசம் அணிந்த வர்களுக்கு மட்டுமே அனுமதி என மாவட்ட நிர்வாகம் உத்தர விட்டுள்ளது. கோடை சீசன் நிறைவு பெற்ற நிலையிலும், தொடர்ந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற் றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி யுள்ள நிலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகை யில் கொரோனா கட்டுப்பாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் அமலுக்கு வந்துள்ளன. பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே சுற்றுலா மையங்களுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று நீலகிரி மாவட்ட நிர்வாகம் உத்த ரவு பிறப்பித்துள்ளது இதனைத்தொடர்ந்து உதகை தாவரவி யல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரிப் பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முகக்கவசம் அணிந்து இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண் டும் என சுற்றுலாப் பயணிகளிடம் பூங்கா ஊழியர்கள் அறி வுரை வழங்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி அனைத்து கல்வி நிறுவனங்களிலும் முகக்கவசம் அணிந்து பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியா்கள் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.