கோவை, அக்.28- ஊடகவியலாளர்களை அநா கரீகமாக பேசிய பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கோயம்புத் தூர் பத்திரிகையாளர் மன்றம் மற் றும் திருப்பூர் மாவட்ட செய்தியா ளர் சங்கம் கடும் கண்டம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் (சிபிசி) வெளியிட்டுள்ள அறிக்கையில், பத் திரிகையாளர்களை தொடர்ந்து உதாசினப்படுத்தி மரியாதை குறை வாக நாகரிகமற்ற முறையில் நடந்து கொள்ளும் பாஜக தமிழ் நாடு தலைவர் அண்ணாமலையை கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கி றது. ”மரத்துமேல குரங்கு தாவுற மாதிரி சுத்தி சுத்தி வரிங்களே என் னது” என ஆவேசத்துடன் தரக் குறைவாக பத்திரிகையாளர்களை விமர்சனம் செய்திருக்கின்றார்.
கேள்வி கேட்கும் பத்திரிகையாளர் கள் மீது கட்சி சாயம் பூசுவது, மிரட்டும் விதத்தில் நடந்து கொள் வது அண்ணாமலையின் அன்றாட நிகழ்வாக மாறிக்கொண்டு வரு கின்றது. அறநெறிகளை அறிந்து பொதுவெளியில் நடந்து கொள்ள வேண்டும். இச்சம்பவத்திற்கு அண் ணாமலை வருத்தம் தெரிவித்து மன் னிப்பு கோர வேண்டும் கடலூர் பத் திரிகையாளர்களின் ஜனநாயக ரீதி யிலான நடவடிக்கைகளுக்கு கோய முத்தூர் பத்திரிகையாளர் மன்றம் முழு ஆதரவு தருகின்றது என மன் றத்தின் தலைவர் மற்றும் செயலா ளர் அறிக்கையில் தெரிவித்துள்ள னர். இதேபோன்று, பத்திரிக்கையா ளர்களை அவமரியாதை செய்த பாஜக தலைவருக்கு திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் (டிடிஜேஏ) சார்பில் கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கம் வெளி யிட்டுள்ள அறிக்கையில், கடலூ ரில் 27-10-22 அன்றுபாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக வின் மாநில தலைவர் அண்ணா மலை கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்து மாநில மின்சாரம் மற்றும் மது விலக்கு அமலாக்க துறை அமைச் சர் செந்தில் பாலாஜி கோவை யில் தெரிவித்த கருத்து குறித்து செய்தியாளர்கள் அண்ணாமலை யிடம் கேள்வி எழப்ப முயன்றனர்.
அப்போது செய்தியாளர்களை பார்த்து, பொது இடம் என்றும் பாராமல் தரம் குறைந்த வகை யில் பேசியது, தமிழகம் முழுவ தும் களத்தில் பணியாற்றும் செய்தி யாளர்கள் மத்தியில் மன உளைச் சலை ஏற்படுத்தியது. பொது இடத் தில் செய்தியாளர்களிடம் சுயமரி யாதை இன்றி பேசி உள்ளார். மேலும் பாஜக தலைவர் அண்ணா மலை செய்தியாளர்களை தரக் குறைவாக பேசுவது இது முதல் முறையும் அல்ல. இதற்கு முன்பு பாஜக அலுவலகத்தில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் களை கமாலயத்தில் வைத்து தரக் குறைவாக பேசி இருந்தார். இது மட்டுமல்லாது பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா சமீப காலங் களில் செய்தியாளர்களை தொடர்ந்து தரக்குறைவாக பேசி வருகின்றனர். ஆளும் கட்சி, எதிர்க் கட்சி என்ற எந்தவித பாகுபாடும் இன்றி அரசியல் கட்சியினரின் கருத்துக்கள் மற்றும் அவர்கள் சுட்டிக்காட்டும் செய்திகளை மக் கள் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லக்கூடிய செய்தி யாளர்களை தொடர்ந்து அவமரி யாதை செய்யும் பாஜகவினரின் இத்தகைய போக்கு மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை யின் செயல் கடும் கண்டனத்துக் குரியது. இச்செயலுக்கு பாஜக வின் மாநில தலைவர் அண்ணா மலை முழு பொறுப்பேற்று, செய்தி யாளர்கள் மத்தியில் வருத்தம் தெரி விக்க வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.