நாமக்கல், மே 23- நாமக்கல் மாவட்டம் பர மத்தி வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங் கரை, கொந்தளம், கபிலர் மலை, பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிரிட்டுள்ளனர். தேங்காய் பருப்புகளை எடுத்து காய வைத்து விற்பனை செய்த பின்னர், தேங்காய் சிரட்டைகளை குவித்து வைத்து, அப்பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு கிலோ கணக் கில் விற்பனை செய்து வருகின்றனர். வியாபாரிகள் தாங்கள் வாங்கிய தேங்காய்சிரட்டைகளை கரி தயார் செய்பவர் களுக்கும், தேங்காய் சிரட்டையை அரைத்து பவுடர் தயாரிக் கும் மில்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். பலர் தேங்காய் சிரட்டைகள் மூலம் உண்டியல், பொம்மைகள் என பல்வேறு வகையான பொருட்களை தயார் செய்து வெளிநாடுக ளுக்கு அனுப்பி விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரத்தில் ரூ. 8க்கு விற்பனையான ஒரு கிலோ தேங்காய் சிரட்டை, இந்த வாரம் ரூ.10 க்கு விற் பனையாகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.