திருப்பூர், மார்ச் 9- வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாயன்று நடைபெற்ற ஏலத்தில் ரூ.1 கோடியே 34 லட்சத் திற்கு தேங்காய் பருப்பு ஏலம்போனது. வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறும். இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத் திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வருவார்கள், செவ்வாயன்று விற்ப னைக்காக 1 லட்சத்து 42ஆயிரத்து 2 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டது. 240 விவசாயிகள் கலந்து கொண்டு இந்த ஏலத்தில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், கொடுமுடி, ஈரோடு பகுதியைச் சேர்ந்த12 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்ச மாக ரூ. 98.50க்கும், குறைந்தபட்சம் ரூ.83.65க்கும் கொள் முதல் செய்தனர். இதில், மொத்தம் ரூ.1 கோடியே 34லட்சத்து 42ஆயிரத்து 30க்கு வணிகம் நடைபெற்றதாக வெள்ள கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பா ளர் சி.மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.