districts

img

நெருக்கடியில் தென்னை விவசாயிகள்

இந்திய அளவில் தென்னை உற் பத்தியில் தமிழகம் 2ஆவது இடத் திலும் சாகுபடி பரப்பில் 3 ஆவது இடத்திலும் இருந்து வருகிறது. தமிழகத்தில் கோவை, திருப்பூர்  உள் ளிட்ட 37 மாவட்டங்களில் மொத்தம் 10,84,116 ஏக்கரில் தென்னை சாகு படி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் முக்கியமாக பொள் ளாச்சி, ஆனைமலை, கிணத்துக் கடவு, சுல்தான்பேட்டை பகுதிகளில் 89,927 ஹெக்டேரில் தென்னை சாகு படி செய்யப்படுகிறது.  தென்னை விவசாயத்திற்கு பெயர்  பெற்ற பொள்ளாச்சியில் தற் போதைய சூழலில் போதிய மழை  இல்லாததால்,  தென்னை விவசாயம்  மற்றும் தென்னை சார் தொழில்களும் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்ட காரணத்தினால் நிலத் தடி நீர் குறைந்துவிட்டது பரம்பிக் குளம், சோலையர், ஆழியார், திரு மூர்த்தி அணை மற்றும் அமராவதி அணை உள்ளிட்ட அணைகளிலும் போதிய நீர் இருப்பு இல்லை போதிய மழையும் இல்லை. ஏற்கனவே விளைவித்த தேங்காய்களுக்கு உரிய விலையில்லை. இப்படி தொடர் நெருக்கடியை சந்திக்கும் தென்னை விவசாயிகளை பாது காக்க வேண்டும் என்கிற குரல் எழுந் துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு தென்னை  விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச்  செயலாளர் ஸ்டாலின் பழனிச்சாமி கூறுகையில், போதிய மழையில் லாமல் விளைச்சலும் குறைந்து விட்டது  கட்டுபடியான விலையும் கிடைப்பதில்லை. ஆண்டுக்கு ஏக்க ருக்கு ஒரு லட்சம் வரை நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். அதோடு தென்னையை தாக்கும்  கேரள வாடல் நோய் மற்றும் வெள்ளை  ஈ தாக்குதல் போன்ற நோய்கள் மூலம்  பாதிக்கும் தென்னைகளால் கடும் மன  உளைச்சலை விவசாயிகள் சந்திக்கின் றனர். ஆகவே, அரசு தென்னையில்  வரும் நோய்களை கட்டுப்படுத்த அரசு  துரித நடவடிக்கை எடுக்க உதவ வேண் டும். 

மேலும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் எண்ணை களுக்கு சுங்கவரி 17.5 சதவிகித்தி லிருந்து 12.5 சதவீதமாக ஒன்றிய  அரசு குறைத்தன் மூலம் இறக்குமதி  அதிகரித்து இந்திய எண்ணைகளுக்கு  விலை கிடைக்காமல் நஷ்டத்தை  சந்தித்து வரும் சூழலில் பாமாயில்  உள்ளிட்ட எண்ணைகளின் இறக்கு மதியை தடை செய்ய வேண்டும்.  தமிழக முழுவதும் உள்ள ரேசன்  கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக  மானிய விலையில் தேங்காய்  எண்ணெய் வழங்க வேண்டும்.  தென்னை மரத்திற்கான பயிர் காப் பீடு ஒரு மரம் பாதித்தாலும் விவ சாயிக்கு  அதற்கான காப்பீடு கிடைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை விவசாயிகள் மற்றும் தென்னை சார்ந்த தொழில்களை காக்க இழப்பீடுகளை கணக்கிட்டு தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் உரிய நிவாரனம் வழங்க வேண்டும் என்றார்.  

செஞ்சேரிமலை நகரகலந்தை கிராமத்தை சேர்ந்த விவசாயி சபரி  கூறியதாவது, போதிய மழை இல்லாத தால் தென்னையை காப்பாற்ற நீரை  விலை கொடுத்து வாங்க வேண்டிய  சூழல் உள்ளது. புதிதாக ஆழ்குழாய்  போடவேண்டும் என்றால் தற் போதைய சூழலில் 1500 அடிவரை நிலத்தடி நீர்மட்டம் சென்றுவிட்டது. செலவு பெரிய தொகையாகும் என்ப தால் விவசாயிகளால் செய்ய முடியாத  நிலை உள்ளது. அரசாங்கம் நீர் மேலாண்மையை மேம்படுத்த வேண்டும். ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை உடனடியாக துவங்க வேண்டும். இது சம்பந்தமாக (T.C.B.F) தமிழ்நாடு தென்னை சார் தொழில் கூட்டமைப்பின் தலைவர் வி.பாலகுருசாமி கூறுகையில், தொழிற்சாலைக்கான மின் காப்பு கட்டணத் தொகை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனை மாநில அரசு  அதை திரும்ப பெற வேண்டும் (112KW  க்கு ரூ.4,200 விருந்து ரூ.17,000 ஆக  உயர்த்தியுள்ளனர். மின்சார கட்டணம்  உயர்ந்துள்ளதால் மேலும் உற்பத்தி  செலவு உயர்ந்துள்ளது. அரசாங்கத் திற்கு அன்னிய செலாவணி சுமார்  ரூ.5000 கோடி ஈட்டி தரும் இத் தொழிலை நஷ்டத்தில் இருந்து தமிழ் நாடு அரசு மீட்டுத் தர வேண்டுமென் றார். வறட்சி, விலையில்லை என அடுத் தடுத்த நெருக்கடியில் வாடும், தென்னை விவசாயிகளை ஒன்றிய,  மாநில அரசு பாதுகாக்க வேண்டும்  என்பது விவசாயிகளின் எதிர்பார்ப் பாக உள்ளது. 

-பி.ராமகிருஷ்ணன்.