districts

img

குறைந்தபட்ச ஊதியம் வழங்கிடுக தூய்மை பணியாளர்கள் போராட்டம்

மேட்டுப்பாளையம், டிச.6- அரசு நிர்ணயம் செய்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வலியுறுத்தி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் க்யூபிஎம்எஸ் தனியார் நிறுவன மேலா ளர், சூப்பர்வைசர்கள் ஆகியோர் மேற்பார்வையில் தூய்மை  பணியாளர்கள், பாதுகாவலர்கள், பிளம்பர், எலக்ட்ரீசியன், சலவை தொழிலாளி என ஒப்பந்த அடிப்படையில் 21 தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தூய்மை பணியாளர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அறிவு றுத்தியுள்ள ரூ.606 தினசரி ஊதியத்திற்கு பதிலாக ரூ.230 மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இதனால் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங் கக்கோரி, கடந்த செப்டம்பர் மாதம் உள்ளிருப்பு வேலை  நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட தனியார் நிறுவன அதிகாரிகள், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் அறிவு றுத்தியுள்ள 2021 ஆம் ஆண்டுக்கான ஊதியத்தை நிலுவை தொகையுடன் வழங்கப்படுவதாகவும்,

தற்சமயம் 2022 - 2023 ஆம் ஆண்டுக்கான கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித் துள்ள குறைந்தபட்ச ஊதியமான ரூ.606யை மூன்று மாதத்திற் குள் நிதி கிடைத்தவுடன் இஎஸ்ஐ, பிஎப் பிடித்தம் போக ஊதி யம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர்.  ஆனால், உறுதியளித்தபடி இதுவரை தனியார் நிறுவ னம் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என  கூறப்படுகிறது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட ஒப்பந்த  தூய்மைப் பணியாளர்கள், மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ள ரூ.606யை ஊதியமாக வழங்கக்கோரி செவ்வாயன்று காலை மருத்துவமனை வளாகம் முன்பு அமர்ந்து திடீர் உள்ளி ருப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் நிறுவன அலுவலர்கள் பேச்சுவார்த்தைக்கு வந்து இப்பிரச்ச னைக்கு தீர்வு காணும் வரை தங்களது போராட்டம் தொட ரும் என தூய்மை பணியாளர்கள் தெரிவித்தனர்.