districts

img

பணி அழுத்தம் காரணமாக ஒப்பந்த தூய்மைப் பணியாளர் தற்கொலை முயற்சி

திருப்பூர், ஏப்.21- நாடு தற்போது தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்தாலும் வரக்கூடிய காலத் தில் தடுமாற்றம் குறைந்து சரியான  திசையில் போகும் என்று ஜி.பாலச்சந் திரன் ஐஏஎஸ் கூறினார். திருப்பூர் புத்தகத் திருவிழாவில் ஏழாம் நாள் நிகழ்வாக புதனன்று நடைபெற்ற கருத்தரங்கிற்கு தென்னிந் திய பனியன் உற்பத்தியாளர் சங்கப்  பொதுச் செயலாளர் எம்பரர் வீ. பொன்னுசாமி தலைமை வகித்தார். ஆ.சிகாமணி வரவேற்றார். இடுவாய்  ஊராட்சிமன்றத் தலைவர் கே.கணே சன், ஜெயசித்ரா ஏ.சண்முகம் உள்ளிட் டோர் முன்னிலை வகித்தனர். முன்ன தாக கிட்ஸ் கிளப் பள்ளி குழந்தைகளின்  கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது. இதில் ஜி.பாலச்சந்திரன் ஐஏஎஸ் பங்கேற்று நாடு எங்கே செல்கிறது? என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: நாடு எங்கே போகிறது என்பதை தமிழ்நாடு நிலையுடன் பேசுகிறேன். அதுவே நாடு முழுமைக்கும் பொருந்தும். பல நூற்றாண்டுக்கு முன்பே, யாதும் ஊரே, யாவரும் கேளிர், தீதும் நன்றும்  பிறர் தர வாரா! என்று உலகளாவிய  பார்வையை சொன்னவர்கள் தமிழர் கள். எந்தவொரு விசயமாக இருந்தா லும் அதை மிகைப்படுத்தியோ, குறைப்படுத்தியோ பார்க்கக் கூடாது. விமர்சனத் தன்மையுடன் காண வேண் டும். இந்தியாவில் ஒருவரை உயர்த்தி னால் உச்சத்துக்கு கொண்டு போவ தும், இல்லாவிட்டால் அவரை அதள பாதாளத்தில் தள்ளி விடுவதும் நடக்கி றது. இத்தகைய உணர்ச்சி வசப்பட்ட நிலை சரியல்ல.   வள்ளுவத்தை உலகப் பொது மறை என்பது சரியல்ல. மறை என்பது வேதம், அதை எல்லோரும் படிக்கக் கூடாது என்று பொருள்படும். ஆனால்  திருக்குறள் அப்படியல்ல. திருவள்ளு வர் அவர் காலத்தைத் தாண்டி இன் றைய காலம் வரை மட்டுமின்றி எதிர்  காலத்துக்கும் பொருந்தக் கூடிய கருத் துகள் பலவற்றைச் சொல்லி இருக்கி றார். எனினும் பெண்ணடிமைத் தனக் கருத்துகளும் குறளில் உள்ளது. பல ஆயிரம் ஆண்டுக்கு முன்பே உயர்ந்த நிலையில் பேசிய தமிழ் கவி தைகள் மறுபடியும் உயர்வு நிலை பெற  ஆயிரம் ஆண்டு இடைவெளி கண்டது  ஏன்?

இடையில் தமிழகம் அதன் தன் மையை இழந்து பாதிக்கப்பட்டது. தனி யொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி கவிதை பாடினார். அவர் மிகச்சிறந்த தேசிய கவி, சர்வதேச கவி என்று சொல்கின்றனர். ஆனால் அவர் ஒரு பிரபஞ்ச கவிஞர். நாட்டை யும், மக்களையும் மட்டும் அவர் நேசிக் கவில்லை. காக்கை, குருவிகள் எங் கள் ஜாதி, காடும், மலையும் எங்கள் கூட் டம் என்றார். அவர் மிகச் சிறந்த தத்துவ ஞானியும் ஆவார். ஒன்றியம் வளர்ந்தால்தான் எல்லா  பகுதியும் வளரும் என்று அண்மையில்  தமிழக ஆளுநர் கூறியிருக்கிறார். அது தவறான கருத்து, சரியான கருத்தை அவருக்குச் சொல்ல வேண்டும். வட இந்திய மாநிலங்களை ஒப்பிடுகை யில், தமிழகம், கேரளம் உள்ளிட்ட  தென்னிந்திய மாநிலங்கள் வளர்ச்சி  அடைந்துள்ளன. சவலைப் பிள் ளையை கவனித்து வளர்ப்பது சரி தான். அதற்காக வளர்ந்த பிள்ளை களைப் பட்டினி போட வேண்டிய தில்லை. வளர்ந்த பகுதிகள் அடுத்த  கட்டத்தை நோக்கி வளர்வதற்கு வழி  செய்ய வேண்டும். இந்தியா தற்போது தட்டுத் தடுமா றிக் கொண்டிருக்கிறது. எனினும் அது சரியான திசையில்தான் போகிறது. தட்டுத் தடுமாறினாலும் அது சரியான திசையில் போய் சேரும். வரக்கூடிய நாட்களில் இந்தியாவின் தடுமாற்றம் குறையும் என்று அவர் கூறினார். நிறை வாக பி.லட்சுமி நன்றி கூறினார்.