districts

img

திருப்பூர் அரசுப் பள்ளியில் மராமத்து பணிகள் நடைபெற்ற 6 மாதங்களில் வகுப்பறைகள் சேதம்

திருப்பூர், ஜன.30- திருப்பூர் வெங்கமேடு வி.கே. அரசு மேல்நிலைப்பள்ளியில் மரா மத்து பணிகள் நடைபெற்ற 6 மாதங் களில் வகுப்பறைகள் சேதமடைந் தும், டெஸ்க்குகள் பராமரிப்பின்றி  குவிந்து கிடப்பதாலும் மாணவர் கள் அதிருப்தியடைந்துள்ளனர். திருப்பூர் அங்கேரிபாளை யத்தை அடுத்த வெங்கமேடு வி.கே.அரசு மேல்நிலைப் பள்ளி யில் அங்கேரிபாளையம், செட்டி பாளையம், ஆத்துப்பாளையம், அனுப்பர்பாளையம், வெங்மேடு உள்பட சுற்று வட்டாரத்தை சேர்ந்த 2400 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரிய-ஆசிரியைகள் பணி யாற்றி வருகின்றனர்.  கடந்த 6 மாதங்களுக்கு முன்பு  பள்ளியில் சேதமடைந்து காணப் பட்ட 3 வகுப்பறை கட்டிடங்களில் ரூ.10 லட்சம் மதிப்பிலான அரசு நிதியில் மராமத்து பணிகள் நடை பெற்றது. ஆனால் சில மாதங் களே ஆன நிலையில்  வகுப்பறை களின் மேல்பகுதியில் உள்ள சுவர் பெயர்ந்து இடிந்து விழுந்த நிலை யில் காணப்படுகிறது. கொரோனா பரவல் முடிவுக்கு வந்ததைய டுத்து மாணவர்கள் பள்ளிக்கு  வந்து வகுப்பறையில் அமர்ந்தால்  ஒருசில இடங்களில் சுவர்  பெயர்ந்து மாணவர்கள் மீது விழும் அபாய நிலையில் உள்ளது.

இதே போல் திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.என். விஜயகுமார் எம்.எல்.ஏ. நிதியில் ரூ.13 லட்சம் மதிப்பில் மாணவர்க ளின் வசதிக்காக பள்ளி நுழைவா யில் முதல் உள்பகுதிவரை பேவர் பிளாக்கிலான தரைதளம் கடந்த 2  ஆண்டுகளுக்கு முன்பு அமைக் கப்பட்டது.  கடந்த சில நாட்களுக்கு முன்பு  பள்ளியில் இருந்த கட்டிடத்தை இடிக்கும் பணிக்காக பொக்லைன் இயந்திரன் வந்தபோது அங்கி ருந்த பேவர் பிளாக் தளம் உடைந் தது. தற்போது அந்த பகுதி முழு வதும் உடைத்து சேதமடைந்து காணப்படுவதால் மாணவர்க ளும், ஆசிரியர்களும் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது நிலைதடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. மேலும் கடந்த காலங்களில் தனி யார் பங்களிப்பு மற்றும் அரசு நிதி யில் பள்ளிக்கு வழங்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட டெஸ்க்குகள் பள்ளி வளாகத்திலும், வகுப் பறைகளிலும் பராமரிப்பின்றி குவிந்து காணப்படுகிறது.  

திருப்பூரில் உள்ள பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள் அமர டெஸ்க் வசதி இல்லாமல் தரை யில் அமர்ந்து வரும் நிலையில் இதுபோன்று நூற்றுக்கணக்கான டெஸ்க்குகள் பராமரிப்பில்லாமல் உபயோகமின்றி கிடப்பது பள்ளி மாணவ-மாணவிகளையும், பெற் றோரையும் கடும் அதிருப்திக்குள் ளாகி உள்ளது. இந்த பள்ளியில் 2  ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாண வர்கள் படிக்கும் நிலையில் ஆசிரி யர்கள் பற்றாக்குறை காணப்ப டுகிறது. ஒரு சில ஆசிரியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிகின்றனர். எனவே பள்ளி யில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்கி கூடுதல் ஆசிரியர்கள் நிய மிக்கப்பட வேண்டும். சுற்று வட்டா ரத்தில் பெரிய பள்ளியாக செயல் படும் இந்த பள்ளிக்கு காவலாளி இல்லாததால் மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நிலையும் உள்ளது.  எனவே பள்ளியில் சேதமடைந் துள்ள வகுப்பறைகள் மற்றும்  நுழைவாயில் தரைதளத்தை உட னடியாக சரி செய்ய வேண்டும் என் றும், மாணவர்களின் நலன் கருதி  பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்கள் மற்றும் காவலாளி நியமிக்கப்பட  வேண்டும் என்றும் மாணவ-மாண விகளும், பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பள்ளி பெற்றோர் ஆசிரி யர் சங்க பொருளாளர் முருகே சன், பள்ளி வளர்ச்சிக்குழு உறுப்பி னரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முன்னாள் கவுன் சிலருமான மாரப்பன் ஆகியோர் கூறியதாவது, மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகை யில் தனியார் மற்றும் அரசு பங்க ளிப்புடன் ஏராளமான வசதிகள்  பள்ளிக்கு செய்து தரப்படுகிறது. அதை முறையாக பேணி, பராம ரிப்பது பள்ளி ஆசிரியர்கள் மற்றும்  மாணவர்களின் கடமையாகும். மராமத்து பணிகள் செய்யப்பட்ட சில மாதங்களிலேயே வகுப்பறை களில் சுவர்கள் பெயர்ந்து காணப் படுவது பணிகள் தரமாக மேற் கொள்ளப்பட்டதா என்ற கேள் வியை எழுப்புகிறது. மேலும் வகுப் பறைகள் மற்றும் பள்ளி வளாகத் தில் பல லட்சம் மதிப்பிலான டெஸ்க்குகள் பராமரிப்பின்றி துருப்பிடித்து குவிந்து கிடப்பது வேதனையை அளிக்கிறது. இவ் வாறு அவர்கள் தெரிவித்தனர்.