அவிநாசி, அக்.9 அவிநாசி கடை வீதியில் யார் ஆக்கிர மிப்பு செய்திருக்கிறார்கள் என்பதை அனைத்து அரசுத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறு வியாபாரம் நடத்தி பிழைப்பு நடத்தி வரும் சாலையோர வியாபாரிகளின் கடைகளை முறைப்படுத்த வேண்டும் என்று அவிநாசி பொதுத் தொழிலாளர் சிஐடியு சங்கம் வலியு றுத்தி உள்ளது. அவிநாசி நகரில் சாலையோர வியாபாரி களின் கடைகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அங்கு நிரந் தரக் கடை நடத்தும் வணிகர்கள், வியாபா ரிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த நோக்கத்திற்காக திங்களன்று அவிநாசி வணிகர் சங்கம் கடையடைப்புக்கும் அழைப்பு விடுத்தனர். இதைத் தொடர்ந்து அவிநாசியில் கடையடைப்பு நடத்தப்பட்டது. அதேசமயம் அவினாசி தினசரி மார்க்கெட் பகுதியில் முன்புறக் கடைகள் அடைக்கப் பட்டு, உள் கடைகள் திறக்கப்பட்டு இருந் தது. அதேபோல நகைக் கடைகள், அச்ச கங்கள், ஜெராக்ஸ் கடைகள் போன்றவை கடையின் முன்புற கதவு பாதி அடைக்கப் பட்டு விற்பனை நடைபெற்றது. அரசு மருத்து வமனை அருகில் செயல்பட்டு வரும் ஆவின் டீக்கடை அடைக்கப்பட்டது. இதனால் நோயாளிகள் தேநீர், பால் பிஸ்கட் போன் றவை இல்லாமல் அவதிப்பட்டனர். உழவர் சந்தை, பூக்கடைகள் வழக்கம் போல் செயல் பட்டது. வணிகர் சங்கத்தினர் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்த நிலையிலேயே அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடத்தி, இதை மறுபரிசீலனை செய்து கடையடைப்பு முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். மேலும் வணிகர் சங்க கோரிக்கைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தவும் அனைத்து அரசியல் கட்சிகளும் அழைப்பு விடுத்தன. இந்த சூழ்நிலையில் கடையடைப்பு நடத் தப்பட்டது
குறித்து சிஐடியு அவிநாசி பொதுத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் அ. ஈஸ்வரமூர்த்தி பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது, சாலையோர வியாபாரிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காக அவி நாசி வியாபாரிகள் சங்கம் நடத்தியிருக்கும் இந்த கடையடைப்பு தேவையற்றது. சாலை யோர வியாபாரிகளை முறைப்படுத்த வேண் டும் என்று சிஐடியு சங்கம் வலியுறுத்தியுள் ளது. அவிநாசி கடைவீதி முழுவதும் மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், பேரூ ராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை துறை அதி காரிகள் இன்றைக்கு நேரில் சென்று பார்க்க வேண்டும். யார் கடைவீதியை அடைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் என்பது தெரியும். எனவே இதை முறைப்ப டுத்தினாலே எந்தவித போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாது. சாலையோர வியா பாரிகள் தமது வாழ்க்கையை வாழ்வதற்கு சிறு வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார் கள். அவர்கள் வாழ்வாதாரத்தைப் பறிப்பது நியாயமல்ல. வியாபாரிகள் சங்கம் என்ற பெயரில் சில பேர் ஆசைக்காக கடைய டைப்பு நடத்தியுள்ளனர். இது தேவையற்றது. இந்த போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். மேலும், அவிநாசி பகுதி மக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என்று தெரி வித்தார்.