திருப்பூர், மே 25- திருப்பூர் மாவட்டத்தில் சரக்கு வேன், ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களுக்கு, விதிமீ றல் என ஆன்லைன் முறையில் அப ராதம் விதிப்பதால் மோட்டார் தொழிலில் ஈடுபட்டுள்ள உரிமை யாளர்கள், ஓட்டுநர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்ற னர். எனவே முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட மோட்டார் ஆட்டோமொபைல் சங்கம் (சிஐ டியு) வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக சிஐடியு மோட்டார் சங்கத் தலைவர் எஸ்.விஸ்வநாதன், செயலாளர் ஒய்.அன்பு, பொருளாளர் அருண் ஆகியோர் செவ்வாயன்று திருப் பூர் வடக்கு, தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களிடம் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது, சரக்கு வாகனங்கள் சாலையில் செல்லும்போது போக் குவரத்து மற்றும் காவல் துறையி னர் ஆய்வு மேற்கொண்டு ஆன் லைன் முறையில் அபராதம் விதிக் கின்றனர். ஆனால், அந்த வாகனங் கள் எந்த விதிமீறலில் ஈடுபட்டன என்ற விபரம் இல்லாமல் அபராதத் தொகை விபரத்தை சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளரின் அலை பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்புகின்றனர். இந்த விபரம், காரணம் தெரியாமல் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அத்துடன் வாகன எப்.சி.க்கு செல்லும்போது அபராதம் நிலுவை உள்ளது; அதை செலுத் தினால்தான் எப்.சி சான்று தர முடி யும் என்று அலுவலர்கள் சொல் லும்போதுதான் விபரம் தெரிகி றது. அத்துடன் பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனாலும் மோட்டார் தொழில் துறையினர் கடுமையாக பாதிக் கப்படுகின்றனர். எனவே மோட் டார் வாகன விதிமீறல் குறித்து முறையாக ஆய்வு செய்து விசா ரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிஐடியு சார்பில் வலியுறுத்தப்பட்டது.