சேலம், ஜூலை 9- ஏற்காட்டில் பாதையோர கடை களை வைக்க அனுமதிக்க வேண்டும் என சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஏற் காடு ஆணையாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். சேலம் மாவட்டம், ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இட மாக உள்ளது. ஆண்டு முழுவதும் ஏற் காட்டின் அழகை ரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித் துக் கொண்டே வருகிறது. ஆனால், அவர்களின் உணவு உள்ளிட்ட சிற் றுண்டி வசதிகளுக்கு போதுமான அள வில் ஏற்காடு பகுதியில் கடைகள் இல்லை. மக்கள் அதிகம் கூடும் ஏற்காடு படகு இல்லம், அண்ணா பூங்கா உள்ளிட்ட இடங்களில் பாதையோர கடைகள் இயங்கிவந்தது. இதனை நம்பி 300க் கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்க ளின் வாழ்வாதாரத்தை நகர்த்தி வந்த னர். இந்நிலையில், சேலம் மாவட்ட நிர்வாகம் ஏற்காட்டில் பாதையோர கடைகளை வைக்க அனுமதி மறுத்தது. இதனால், தொழிலாளர்களின் வாழ் வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் சிஐடியு பாதையோர தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இறுதியாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஒரு வாரத்திற்குள் கடை களை வைக்க நடவடிக்கை எடுக்கப்ப டும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்த னர். இருப்பினும் இதுவரை கடை வைக்க அனுமதி வழங்காததை தொடர்ந்து சனியன்று சிஐடியு சங்க நிர்வாகிகள் ஏற்காடு ஆணையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், மாவட்ட ஆட்சியர் இதுவரை எந்த அறிவிப்பும் அளிக்கவில்லை. அறிவிப்பு வந்தவுடன் கடை வைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் தெரிவித்துள்ளார். இத னைத் தொடர்ந்து ஏற்காடு பாதையோர வியாபாரிகளை கடைகள் வைக்க இனி யும் அனுமதிக்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்து வோம் என சங்க நிர்வாகிகள் தெரிவித்த னர். இந்த பேச்சுவார்த்தையில் சிஐடியு சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் பி. ராமமூர்த்தி, பாதையோர சங்க செயலா ளர் தனசேகர், கிருஷ்ணமூர்த்தி, ராஜேந் திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற னர்.