districts

img

ஒரேமாதிரியான ஏற்றுக்கூலி வழங்கிடுக சிஐடியு டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, மே 5– டாஸ்மாக் குடோன்களின் பணியாற் றும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான கூலியை வழங்க வலியுறுத்தி சிஐடியு  டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர் கள் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசிற்கு அதிக வருவாயை  ஈட்டித்தருகிற துறையாக டாஸ்மாக் நிர்வாகம் உள்ளது. ஆனால், இதில் பணியாற்றும் தொழிலாளர்களோ மிக பரிதாப நிலையில் உள்ளனர். குறிப் பாக டாஸ்மாக் குடோன்களின் பணியாற் றும் சுமைப்பணி தொழிலாளர்கள் அத்த கூலியாக பணியாற்றி வருகின்றனர்.  குறிப்பாக, மதுபான பெட்டிகளை ஏற் றுவதற்கான கூலியை உயர்த்தித்தர  வேண்டும் என்று தொடர்ந்து போராடி  வருகின்றனர். தற்போது ஒரு மதுவகை  பெட்டியை ஏற்றுவதற்கு கூலியாக  ரூ1.45 பைசா தரப்படுகிறது. ஒரு பெட் டிக்கு ஏற்று கூலி ரூ.3.50 வேண்டும் என பல வருடங்களாக கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர்.

இதுகுறித்து எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக் கையும் நிர்வாகத்தால் எடுக்கவில்லை. அதேநேரத்தில் ஒவ்வொரு மாவட் டத்திலும் டாஸ்மாக் குடோன்களில் பணியாற்றும் சுமைப்பணி தொழிலா ளர்களுக்கு ஒவ்வொரு வகையான கூலி  வழங்கப்படுகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு ஒரே மாதிரியான கூலியை நிர்ண யம் செய்து வழங்க வேண்டும் என் பதை வலியுறுத்தி சிஐடியு டாஸ் மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதன்ஒருபகுதியாக கோவை பீள மேடு டாஸ்மாக் குடோன் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு டாஸ் மாக் குடோன் சுமைப்பணி தொழிலா ளர் சங்க தலைவர் ஜகாங்கீர் தலைமை  வகித்தார். இதில், சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜன் உட்பட திரளான சுமைப்பணி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பொள்ளாச்சி தெற்கு கிடங்கு முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க தலைவர் என்.மாயவன் தலைமை வகித்தார். செயலாளர் திருமலை ராஜா ராம் கோரிக்கைகளை விளக்கி உரை யாற்றினார். இதில், சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் ராமகிருஷ்ணன், சுமைப்பணி நிர்வாகி கள் என்.பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டம், குன்னூர் மது பான கிடங்கு முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தை சுமைப்பணி தொழிலாளர் சங்க செயலாளர் ரங்கசாமி துவக்கி வைத்தார். இதில், சிஐடியு மாவட்ட பொருளாளர் நவீன் சந்திரன், சிஐடியு  நிர்வாகி வினோத், ஆட்டோ சங்க செய லாளர் யோகேஷ், சாலையோர வியா பாரிகள் சங்க செயலாளர் ரபீக், டாஸ் மாக் சிஐடியு நிர்வாகி பாலசுப்பிரமணி யம் உட்பட சுமைப்பணி தொழிலாளர் கள் பலர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்ட டாஸ்மாக்  குடோன் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சுமைப்பணி தொழிலாளர் சங்க கிளைத் தலைவர் எம்.பெருமாள் தலைமை வகித்தார். இதில், சிஐடியு  மாவட்ட செயலாளர் என்.வேலுச்சாமி, சுமைப்பணி சங்க நிர்வாகிகள் முனியப் பன், செந்தில், மாரப்பன், வரதராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.