ஈரோடு, மார்ச் 21- சமூக விரோதிகளிடமிருந்து டாஸ்மாக் ஊழியர்களையும், உடைமைகளையும் பாதுகாத்திட வலியுறுத்தி சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் ஈரோடு அருகே சித்தோட்டில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. பாதுகாப்பற்ற இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும். அல்லது மூட வேண் டும். டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்த ரம் செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. சங்கத்தின் பொதுச்செயலாளர் வை. பாண்டியன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்றார். இதில், சம்மேளன பொதுச்செய லாளர் க.திருச்செல்வன், சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணியன் மற்றும் சம் மேளன குழு உறுப்பினர் பொன்.பாரதி ஆகி யோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் ஜி. சி.சோமசுந்தரம், வி.ராஜேந்திரன், ம.ரமேஷ், கே.பி.பாக்கியராஜ், பி.அர்த்தநாரி, ஏ. நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். இறுதியாக பொருளாளர் க.ரவிச் சந்திரன் நன்றி கூறினார்.