districts

img

சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் மக்கள் சந்திப்பு

பொள்ளாச்சி, செப்.20- பணிநிரந்தரம் செய்து, கால முறை ஊதியம் வழங்கக்கோரி கோவையில் சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் மக்கள் சந்திப்பு இயக்கத்தில் ஈடுபட்டனர். இருபது ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திட வலியுறுத்தி சிஐடியு டாஸ் மாக் ஊழியர் சங்கத்தின் மாநில சம்மேளனம் சார்பில் மாநில முழுவ தும் பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளியன்று பிரச் சார இயக்கம் நடைபெற்றது. பொள் ளாச்சியில், இச்சங்கத்தின் மாவட் டத் தலைவர் எஸ்.மூர்த்தி தலைமை யில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தில், மாவட்டச் செயலாளர் ஏ.ஜான் அந்தோணி ராஜ், பொருளாளர் எஸ்.ராமகிருஷ் ணன், சம்மேளன துணைச் செயலா ளர் கே.செந்தில்பிரபு, மாநில நிர்வாகி ஜி.சரவணன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். இதில்,  தமிழகத்தில் 20 ஆண்டு களுக்கு மேலாக பணியாற்றும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந் தரம் செய்து காலமுறை ஊதி யத்தை அமல்படுத்திட வேண்டும். சட்ட மற்றும் சமூக பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். ஓய்வு பெறும் வயதை 58-லிருந்து 60- ஆக உயர்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இப்பிரச்சாரத்தில் முன்வைக்கப்பட்டது.