கோவை, டிச.18- புதிய மதுக்கூட ஒப்பந்ததா ரர்கள் தங்கு தடையின்றி மதுக் கூடம் நடத்துவதை உத்தரவாதப் படுத்த கோரியும், புதிதாக மன மகிழ் மன்றங்களுக்கு உரிமம் வழங்குவதை கைவிட வேண்டும் எனவும் டாஸ்மாக் ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்க கோவை மாவட்டக் குழு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது ஆயிரம் கடைகள், தற்போதைய திமுக ஆட்சியில் 500 கடைகள் என மொத்தம் 1500 மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. தற்போது தமிழ் நாட்டில் 5329 கடைகள் செயல் பட்டு வருகின்றன. கோவை மாவட் டத்தை பொறுத்த வரை கோவை வடக்கில் 147 டாஸ்மாக் கடைக ளும், 8 உயர்தர எலைட் மதுபான கடைகளும், கோவை தெற்கில் 128 டாஸ்மாக் கடைகளும், ஒரு உயர்தர எலைட் மதுபான கடை யும் இயங்கி வருகின்றன. கோவை வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங் களில் செயல்படும் எலைட் அல்லாத இதர டாஸ்மாக கடை களை ஒட்டியுள்ள மதுக்கூடங்கள் உரிமத்தோடும், உரிமம் இல்லா மலும் செயல்பட்டு வந்தன. உரிமம் இன்றி செயல்படும் மதுக்கூடங் களால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இழப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என தொழிற்சங் கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், டாஸ்மாக் நிர்வாகம் உரிமம் இன்றி செயல் பட்ட மதுக்கூடங்களை இழுத்து மூடி, இ-டெண்டர் முறையில் மதுக்கூட ஏலம் நடத்த வேண்டும் என்ற அறிவிப்பை அரசு வெளியீடு செய்தது. இது பாராட்டுக்குரியது. தொடர்ந்து, இணைய வழியில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் 135 மதுக்கூடங்களுக்கு கடந்த டிச.16 ஆம் தேதி ஏலம் நடத்தி முடிவடைந்துள்ளது. அதிக ஏலத் தொகை தெரிவித்த நபர்களுக்கு உரிமம் வழங்கும் பணி நடந்து வருகிறது. ஆனால், மதுக்கூடங் களை ஏற்கனவே நடத்தி வந்த வர்கள், அந்த இடங்களை தங் கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு புதியதாக உரிமம் பெற்ற நபர்களை அனுமதிக்கா மல், இடையூறு ஏற்படுத்தி வரு கின்றனர். எனவே, உடனடியாக அரசு இதில் கவனம் செலுத்தி. உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். மேற்படி, மதுக் கூட ஏல முறையை இ - டெண்டர் முறையில் நடத்த வேண்டும். டாஸ்மாக் கடைகள் கேரளாவை போல் முற்றிலும் கணினி மயப்ப டுத்த வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களை பணி வரன்முறை செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இஎஸ்ஐ மருத்துவத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மேலும், எப்எல்-2 (FL-2) மனமகிழ் மன் றங்கள் என்ற பெயரில் தனி யார்மய மதுவிற்பனையை கை விட்டு, அரசின் பொதுத்துறை நிறு வனமான டாஸ்மாக் நிறுவனத்தை பாதுகாக்க தமிழக அரசும், டாஸ் மாக் நிர்வாகமும் உரிய நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் வலியுறுத்தப் பட்டுள்ளது.