சேலம், ஜூலை 30- இருபது ஆண்டுகள் பணிபு ரிந்து வரும் டாஸ்மாக் ஊழியர்க ளுக்கு பணி வரன்முறைப்படுத்தி, காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என சேலம் மாவட்ட சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கப் பேரவை தீர்மானம் நிறைவேற்றி யுள்ளது. சிஐடியு சேலம் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின், 9 ஆவது ஆண்டு பேரவை சேலம் மாவட்ட விபி.சிந்தன் நினைவகத் தில், செவ்வயன்றுநடைபெற்றது. சங்கத்தின் மாவட்டக் குழு உறுப் பினர் எஸ்.கே.தியாகராஜன் தலைமை ஏற்றார். இணைச் செயலாளர் செல்வராசு வரவேற்று பேசினார். வேலை அறிக்கை மற்றும் நிதிநிலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் விஜயகுமார் மற்றும் பொருளாளர் எம்.விஜய குமார் ஆகியோர் முன்வைத்தனர். இதில், டாஸ்மாக் ஊழியர் களுக்கு மிகவும் பொருத்தமான ஈஎஸ்ஐ திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். டாஸ்மாக் நிறுவனத்தில் காலி பாட்டில்கள் திரும்பப் பெரும் திட்டத்தை டாஸ்மாக் ஊழியர்களை கொண்டு செயல்படுத்துவதை கைவிட வேண்டும். டாஸ்மார்க் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 இல் இருந்து 60 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு சாதக மாக நீதிமன்றத்தில் பெறப்பட்ட தீர்ப்புகளை அரசு மேல்முறை யீடு செய்வதை கைவிட்டு அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டது. பேரவையில், சேலம் சிஐடியு டாஸ்மாக் சங்கத்தின் மாவட்டத் தலைவராக எஸ்.கே. தியாகரா ஜன், செயலாளராக கே.விஜய குமார், பொருளாளர் எம்.விஜய குமார் மற்றும் துணைப் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட 22 பேர் கொண்ட நிர்வாகக்குழு பேரவை யில் தேர்வு செய்யப்பட்டது.