districts

img

“அரசு இயந்திரம் செயல்பட்டால் தான் அரசுக்கு மரியாதை”

உலக உண்மை நிலையை அறிய தீக்கதிர் படியுங்கள்

இதேபோல், தருமபுரி சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்ற கூட் ட்டத்தில் அ.சவுந்தரராசன் பேசுகை யில், கடந்த 175 நாட்களாக பாலக் கோட்டில் ஹட்சன் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். இந்த தொழி லாளர்களின் நியமான கோரிக்கை களை நிறைவேற்ற மாவட்ட நிர்வாக மும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர் களை பாதுகாக்க சங்கம் வைக்கும் உரிமை உள்ளது. ஆனால், போரா டும் உரிமை சங்கத்திற்கு மறுக்கப் படுகிறது. தன் வாழ்க்கைக்கு தேவை யான உரிமையை கேட்கும், தொழி லாளர்களின் குறைந்தபட்ச தேவை யை நிர்வாகம் செய்ய மறுப்பது கண்டனத்துக்குரியதாகும். அமெரிக்க இதுவரை 202 யுத் தம் நடத்தியுள்ளது. குறிப்பாக வியட் நாம் மீது 25 முறை யுத்தம் செய்து தனது அரக்கதனத்தை வெளிப்ப டுத்தியுள்ளது. தற்போது உக்ரைன்  ரஷ்யாவுக்கு இடையே போருக்கு காரணமாக அமெரிக்க உள்ளது. நோட்டோ படையுடன் உக்ரைன் இணைவதாலேயே  போர் நடந்து வருகிறது. யார் போருக்கு காரணம் என்ற உண்மையை சொல்லாமல், சர்வதேச முதலாளித்துவ ஊடகங் கள் திட்டமிட்டு மறைத்து வருகி றது. உக்ரைன் - ரஷ்யா போர் குறித்து உண்மை நிலையை அறிய வேண் டும் என்றால் தீக்கதிர் படிக்க  வேண்டும். உக்ரைன் போராட்டத் தின் விளைவாக ஒரு டன் பேப்பர்  ரூ.10 ஆயிரம் விலையாக உயர்ந் துள்ளது. இப்போராட்டத்திற்கு எதி ராக விளம்பரம், செய்திகள் கொடுத் தால் தீக்கதிரில் வெளியிடுவது இல்லை. நாம் கொள்கை லட்சியத் திற்காக தீக்கதிர் நடத்திக்கொண்டு இருக்கிறோம். நாம் நடுநிலையாக இயங்கவில்லை, ஏழைகளுக்காக மட்டுமே செயல்படுகிறோம். மக்களி டம் முற்போக்கான கருத்துகளை உருவாக்கக்கூடிய ஆயுதம் பத்தி ரிக்கை தான். ஆகையால், நாம் தீக்க திரை வாங்கி படிக்க வேண்டும், என்றார். இக்கூட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் சி.நாகராசன் தலைமை வகித்தார். இதில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்.வே.விசுவநாதன், சிஐடியு மாநி லக்குழு உறுப்பினர்கள் ஜி.நாக ராஜன், சி.கலாவதி, மாவட்ட தலை வர் பி.ஜீவா, பொருளாளர் ஏ.தெய் வானை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சேலம், மார்ச் 16- அரசு இயந்திரம் செயல்பட்டால் தான், அரசுக்கு மரியாதை என சேலத் தில் நடைபெற்ற அகில இந்திய பொது வேலை நிறுத்த தயாரிப்பு சிறப்பு கருத் தரங்கத்தில் சிஐடியு மாநிலத் தலை வர். அ.சவுந்தரராஜன் உரையாற்றி னார். மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கை களை கண்டித்தும் நாட்டின் பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்து மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் அகில இந்திய பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது.

இந்த வேலை நிறுத்தத்தின் சாராம்சங்களை விளக்கி சிறப்பு கருத் தரங்கம் சேலம் திருவாகவுண்டனூர் பைபாஸ் பகுதியில் மத்திய தொழிற் சங்கங்கள் சார்பில் சிஐடியு மாவட்ட தலைவர் பி.பன்னீர்செல்வம் தலை மையில் நடைபெற்றது. காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலா ளர் ஆர்.தர்மலிங்கம் வரவேற்புரை யாற்றினார். இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.தீனத யாளன், இன்சூரன்ஸ் ஊழியர் கூட்ட மைப்பின் பெண்கள் துணைக்குழு நிர்வாகி ஷோபனா, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கோபால், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் என்.திருவரங் கன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். இக்கருத்தரங்கில் சிஐடியு மாநி லத் தலைவர் அ.சௌந்தரராஜன் பேசு கையில், நாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாப்பது மிக மிக அவசியமான ஒன்று எனவும், அரசு இயந்திரம் செயல்பட்டால்தான் அரசுக்கே மரியாதை இருக்கும் என வும் தெரிவித்தார். ஒன்றிய மோடி அர சின் அனைத்து செயல்பாடுகளும் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக மட் டுமே உள்ளது.

சாதாரண ஏழை, நடுத்தர மக்களுக்கும், தொழிலாளர் களுக்கும் பாதுகாப்பில்லாத திட்டங் களை தொடர்ந்து செயல்படுத்தி வரு வது, மக்களை பின்னோக்கி கொண்டு செல்லும். மக்கள் நலனுக்கு சம்பந்த மில்லாத செயல்பாடுகளை ஒன்றிய மோடி அரசு தொடர்ச்சியாக செய்து வருகிறது. அதன் ஒருபகுதியாகதான் இந்தியாவில் பொதுத்துறை நிறு வனங்களாக உள்ள ரயில்வே, பிஎஸ் என்எல், எல்.்ஐ.சி, விமான நிலையங் கள், உருக்கு ஆலைகள் உள்ளிட்ட 23  பொதுத்துறை ஆலைகளை விற்பதற் கான நடவடிக்கைகளை மோடி அரசு மேற்கொண்டு வருகிறது. வங்கிகளை தனியார்மயபடுத்து வதால் நாட்டின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் பாதிப்படையும். தனியார் நிறுவனங்கள் தங்களின் சுயலாபத்திற் காக வட்டி விகிதத்தை உயர்த்துவார் கள். கார்ப்பரேட் நலன் சார்ந்த விஷயத் தில் மக்கள் சேமித்து வைத்த பணம் செலவிடப்படும் அபாயம் ஏற்படும் என்றார். மேலும், உக்ரைனில் போர் நிலவி வரும் சூழலில் அங்கு படிக் கும் மாணவர்கள் தற்போது நாடு திரும் பியுள்ள சூழலில் அவர்கள் படித்த அதே படிப்பை இந்தியாவில் படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட் டின் வளர்ச்சியில் தகவல் தொழில்நுட் பத்தில் முக்கிய பங்காற்றிய பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது.

தகவல் தொழில்நுட் பத்திலும், தொலை தொடர்பிலும் முக் கிய பங்காற்றி வரும் பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டுமே மக்களின் எதார்த்த வாழ்வாதாரத்திற்கு பங்களிப்பை செய்ய முடியும். பிஎஸ்என்எல் பொதுத் துறை நிறுவனமாக இருந்தால் தான் அனைத்து பொதுமக்களும் குறிப் பிட்ட தொகைக்கு மலிவான விலை யில் பயன்பெற முடியும். 1996 ஆம் ஆண்டிற்கு பின்பு பிஎஸ்என்எல் சிறப் பாக செயல்பட்டதன் விளைவாக தான் கட்டணங்கள் தற்போது முறைபடுத் தப்பட்டுள்ளது. தனியாரிடம் இது சென் றால் உச்சகட்ட கட்டணத்தை வசூலிக் கப்படும் நிலை ஏற்படும். நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங் காற்றி வரும் எல்ஐசி நிறுவனம், ஆரம் பத்தில் ஐந்து கோடி முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 39 லட் சம் கோடி ரூபாய் அளவிற்கு முன்னேறி யுள்ளது. 120க்கும் மேற்பட்ட தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இருந்தா லும், மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத, நிரந்தரமில்லாத செயல்களையே அவை செய்து வருகின்றன. ஆனால், பொது நிறுவனமான எல்ஐசி இன்ஷூ ரன்ஸ் நிறுவனம் 99 சதவிகித பணத்தை, கொரோனா காலங்களில் மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளுக் காக வழங்கியுள்ளது. அப்படிப்பட்ட பொதுத்துறை நிறுவனத்தை தற் போது ஒன்றிய மோடி அரசாங்கம், தனி யாருக்கு அடிமாட்டு விலைக்கு விற் பனை செய்ய துடிக்கிறது.  கொரோனா ஊரடங்கு காலத்தில் எண்ணற்ற தொழில்களும், தொழிலா ளர்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ள னர். குறிப்பாக முறைசாரா தொழில் கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள் ளது. தற்போதைய ஆட்சியாளர்கள், தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி வருகின்றனர்.

இந்தியா போன்ற நாடுகளில் ஊதியத்தை உயர்த்தி வழங்கினால் மட்டுமே தற் போதைய நுகர்வு கலாச்சாரத்தில் பொருட்களை மக்கள் வாங்க முடி யும். ஆனால், மோடி அரசின் தேசிய அடிமட்ட கூலி வெறும் 178 ரூபாயாக மட்டுமே உள்ளது. இதனால் மக்க ளின் முன்னேற்றமும், நாட்டின் முன் னேற்றமும் பொருளாதார வளர்ச்சி யில் பின்னடையும், என்றார். அண்டை மாநிலமான கேரளாவில் குறைந்தபட்சம் 600 ரூபாய் தினக்கூலி வழங்க அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுபோல் இந் தியா முழுவதிலும், தினக்கூலியாக ரூ.600யை உத்தரவாதப்படுத்த வேண் டும். மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொது போக்குவரத்தை நம்பி மட் டுமே மக்கள் உள்ளனர். பள்ளி, கல் லூரி மாணவர்கள் இலவச பேருந்து அட்டையை பயன்படுத்தி கல்வி பயின்று வருகின்றனர். அரசு பேருந்து களை தனியாருக்கு விற்றால், முதலா ளிகள் இலவசத்தை வழங்க மாட் டார்கள். தங்கள் வாழ்வாதாரத்தில் குறிப்பிட்ட பகுதியை பயணச் செல வுக்காக வைத்திருக்க வேண்டிய நிலை உருவாகும்.

குறைந்த அளவிலான கூலியை  வாங்கிக் கொண்டு வாழ்க்கையை நடத்தி வரும் சாதாரண மக்கள், தங்க ளின் குழந்தைகளின் கல்விக்காக பெரும் போராட்டங்களை அனுப வித்து வருகின்றனர். தனியார் பள்ளி கள் லாபம் பார்க்க, அதிக கட்டணங் களை வசூலித்து வருகிறது. எனவே, அனைத்து தனியார் பள்ளி, கல்லூரி களையும் அரசு நிறுவனமாக மாற்ற வேண்டும். ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி வரி குறைந்தபட்சம் 5 சதவிகிதமாக இருந்ததை, தற்போது 8 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. இது ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை அழிக் கும் செயலாக உள்ளது. நாட்டில் மத மோதல்களையும், மத உணர்வு களையும் மோடி தலைமையிலான அரசு முன்னிறுத்தி, அதன்மூலம் பயன டைந்து வருகிறது. நாட்டின் மிக முக்கிய தொழிலாக உள்ள விவசாயம் இன்று கேள்விக் குறியாக உள்ளது.

விவசாயத்திற்கு அளிக்கப்பட்ட இலவச மின்சாரத்தை ரத்து செய்ததன் விளைவால், இன்று விவசாயம் செய்ய முடியாத சூழல் உள்ளது. இதுபோல்தான் அனைத்து பொதுத்துறை நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்தால், தனியார் நிர்ணயிக்கும் தொகையை மக்கள் செலுத்தி செயலாற்றும் சூழல் ஏற்படும். எனவே மக்களுக் கும், விவசாயிகளுக்கும் தொழிலா ளர்களுக்கும் எதிராக செயல்படும் ஒன்றிய மோடி அரசின் செயல்பாடு களை கண்டித்து மத்திய தொழிற் சங்கங்கள் சார்பில் மார்ச் 28, 29 தேதி களில் நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் அனைத்து தரப்பு மக்களை பங்கேற்க செய்ய வேண்டும், என்றார். முன்னதாக, இந்நிகழ்வில் காப் பீட்டு கழக ஊழியர் சங்க தென்மண் டல துணைத்தலைவர் கே.சுவாமி நாதன், சிஐடியு சாலைப்போக்கு வரத்து சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.கே.தியாகராஜன், சிஐடியு மாவட்ட செயலாளர் டி.உதயகுமார், ஐஎன்டியூசி மாவட்ட தலைவர் டி.வட மலை, ஏஐடியூசி மாவட்ட செயலா ளர் எம்.முனுசாமி, சேலம் உருக் காலை தொமுச பொதுச்செயலாளர் பெருமாள், எஸ்எம்எஸ் மாவட்ட செய லாளர் கோவிந்தராஜ், ஏஐசிசிடியூ மாவட்ட செயலாளர் வேல்முருகன் உட்பட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட னர்.