districts

img

சிஐடியு தூய்மைப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் வெற்றி

அவிநாசி, ஆக.26- திருமுருகன் பூண்டி நகராட்சி தூய்மைப்பணியாளர்களுக்கு நிர்ணயித்த கூலியை வழங்காமல் கூலியை குறைத்து கொடுத்த நிலையில், சிஐடியு தலைமையில் தூய்மைப்பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன்ஒருபகுதியாக, இரண்டு நாட் கள் காத்திருப்பு போராட்டம் நடந்து  வந்த நிலையில், அறிவித்த கூலியை தருவதாக நகராட்சி ஆணையர் உறுதியளித்தார். இதனையேற்று போராட்டத்தை ஊழியர்கள் போராட்டத்தை கை விட்டு பணிக்கு திரும்பினர்.  திருப்பூர் மாவட்டம், திரு முருகன்பூண்டி நகராட்சியில் 130க் கும் மேற்பட்ட தூய்மை பணியா ளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ரூ.592 ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. தற் போது, இத்துறையின் பணிகள் தனியாருக்கு விட்ட பிறகு, வெறும்  ரூ.380 மட்டுமே ஊதியம் வழங் கப்பட்டுள்ளது. இது இத்தொழி லாளர்கள் மத்தியில் பெரும் கொதிப்பை உண்டாக்கியது. இது குறித்து முறையிட்டும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாத நிலையில், தொழிலாளர்களின் ஆவேசம் அதிகமானது. இதனையடுத்து, அறிவித்த கூலியை வழங்க வேண்டும் என  தூய்மை பணியாளர்கள் சிஐடியு தலைமையில் பணிகளை புறக்க ணிப்பது, மறியல் உள்ளிட்ட தொடர்  போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.  இதனையடுத்து, தொழிலாளர் நல  துறையுடன் சிஐடியு நிர்வாகிகள் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. பின்னர், ஆகஸ்ட் 18ஆம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில், 25  ஆம் தேதி  நகராட்சி நிர்வாக ஆணையரகம் அறிவித்த கூலி   507 ரூபாயில் இஎஸ்ஐ,  பி எஃப்  பிடித்தம் போக 442 ரூபாய் வழங்கு வதாக ஒப்புக்கொண்டனர். மேலும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள் இதனை நடைமுறைப்படுத்துவதாக உறுதி  அளித்தனர்.

இருப்பினும் திரு முருகன்பூண்டி நகராட்சி 25 ஆம்  தேதி கடந்த நிலையிலும், உயர்த் தப்பட்ட கூலியை வழங்காமல் இழுத்தடித்து வந்தது. இதனைத் தொடர்ந்து, வெள்ளியன்று திரு முருகன்பூண்டி  நகராட்சி அலுவ லகம் முன்பு சிஐடியு தலைமையில் தூய்மைப்பணியாளர்கள் காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும், நகராட்சி அலுவலக வளா கத்திலேயே உணவு சமைத்தும், உணவருந்தியும் போராட்டத்தை தொடர்ந்தனர்.தொழிலாளர்களின் உறுதிமிக்க போராட்டம் நிர்வாகத் திற்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.  இதனைத் தொடர்ந்து நக ராட்சி ஆணையர் ஆண்டவர், ஒப் பந்ததாரர் ஆகியோர், சிஐடியு மாவட்டச் செயலாளர் ரங்கராஜ், ஊரக உள்ளாட்சி ஊழியர் சங்கத் தின் மாவட்டத் தலைவர் பழனிச் சாமி, சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் முத்துசாமி, சிஐடியு நிர்வாகிகள் சுப்பிரமணியம், தேவராஜ், பாலசுப்பிரமணியம், சிவக்குமார் ஆகியோருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் அறிவித்த கூலி வழங்கு வதாகவும், அதேபோல  தமிழக அரசு அறிவித்த குறைந்தபட்ச கூலியை  தருவதாகவும் உறுதிய ளித்தனர்.  சிஐடியு தலைமையிலான உறுதி மிக்க போராட்டம் வெற்றி யடைந்த நிலையில், போராட் டத்தை கைவிட்டு தொழிலாளர்கள் பணிகளுக்கு திரும்பினர்.