மேட்டுப்பாளையம், நவ.18- மேட்டுப்பாளையம் நகராட்சி நிர் வாக அதிகாரிகள் கண்துடைப்புக்காக நடத்தப்பட்டு வரும் சாலையோர சிறு வியாபாரிகள் முகாமினை சிஐடியு தொழிற்சங்கம் கண்டனம் தெரிவித்த நிலையில், நகராட்சி ஆணையருட னான சிஐடியுயினர் பேச்சு வார்த்தை யில் ஆணையர் இனி வரும் காலங்க ளில் இது போன்ற தவறுகள் நடைபெ றாது என உறுதியளித்தனர். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் நகராட்சி பகுதியில் சுமார் 800 க்கு மேற்பட்ட சாலையோர சிறு வியாபாரிகள், சிறு வியாபாரம் செய்து வாழ்வாதாரங்களை பாதுகாத்து வரு கிறார்கள். இந்நிலையில், இவர்க ளுக்கு அரசால் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் சாலையோர சிறு வியா பாரிகளுக்கு முறையாக கிடைப்ப தில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், எந்தவித முன்னறி விப்புமின்றி சாலையோர வியாபாரிக ளுக்கான முகாம் என கண்துடைப்பாக மேட்டுப்பாளையம் நகராட்சி ஒரு முகாமை நடத்தியுள்ளது. இதற்கு சிஐ டியு சாலையோர வியாபாரிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் கூறுகை யில், மேட்டுப்பாளையம் நகராட்சியை பொறுத்தவரை சாலையோர சிறு வியா பாரிகள் விற்பனைக் குழு தேர்தல் நடத் தப்பட்டு சம்பந்தப்பட்ட விற்பனைக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட் டுள்ளனர். ஆனால் இந்த உறுப்பினர்க ளுக்கு கூட எந்தவித தகவலும் தெரிவிக் காமல் நலத்திட்ட நிகழ்வு முகாம் என பெயரளவுக்கு நடத்தியுள்ளனர். மேட் டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம், தன் னிச்சையாக ஒன்றிய அரசு அறிவிக்கி றது அதை இரண்டு புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து விட்டால் போதும் என்ற எண்ணத்தில் இயங்குகிறது. இதனால், சாலையோர சிறு வியாபாரிகளுக்கு எந்தவித பயன் களும் கிடைப்பதில்லை. கணக்கு காட் டும் விதமாக செயல்படுவது கண்டனத் திற்குரியது. இதேபோல் தொடர்ந்து நடைபெற் றால் சாலையோர சிறு வியாபாரிகளை ஒன்றிணைத்து மேட்டுப்பாளையம் நக ராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு முறையாக செயல்படாத அதிகாரி களை பணியிட மாற்றம் செய்யக்கோரி போராட்டம் நடத்தப்படும் என்றனர். இதனைத்தொடர்ந்து, மேட்டுப் பாளையம் தாலுகா சிஐடியு பொது தொழிலாளர் சங்கம் சார்பில், கண் துடைப்பாக நடைபெற்ற முகாம் குறித்து கண்டன அறிக்கை வெளியிடப்பட்டது. இதனையடுத்து மேட்டுப்பாளையம் நக ராட்சி ஆணையர் அமுதா, காவல்துறை ஆய்வாளர் சின்னகாமன் உள்ளிட்ட அதி காரிகள் மேட்டுப்பாளையம் சிஐடியு பொதுச் செயலாளர் பாஷா உள்ளிட் டோரிடம் திங்களன்று பேச்சு வார்த்தை யில் ஈடுபட்டனர். இறுதியில் இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடைபெறாது என உறுதியளித்தனர்.