districts

img

மதுக்கூடங்களை மூட வலியுறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருப்பூர், மார்ச் 11- சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, மதுக்கூடங் களை  மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தி யது. திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பாக வியாழனன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணியிட மாறுதல் கொள்கையை உருவாக்கி அமலாக்க வேண்டும். முறைகேடாக வழங்கப்பட்ட பணியிட மாறுதல் ஆணை களை ரத்து செய்ய வேண்டும். கொரோனா தொற்று பரவல் தடுப்பு ஏற்பாட்டு செலவினத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு மீது  மேல் முறையீடு செய்யாமல் மதுக்கூடங்களை (பார்) மூட  வேண்டும். டாஸ்மாக் கடை நிர்வாகத்தில் தலையிடும் மது  பார் உரிமதாரர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஒய்.அன்பு தலைமை ஏற்றார். மாவட் டத் தலைவர் எம்.ஆறுமுகம், துணைச் செயலாளர் என்.கனக ராஜ், திருமூர்த்தி, செந்தில்குமார், முத்துசாமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்கள். டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்ட னர். இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சிவக்கொழுந்து சுப்பிரமணியத்திடம் சங்க நிர்வா கிகள் கோரிக்கை மனு அளித்தனர்.