உதகை, செப்.28- உதகையில், சாலையோர கடைகளை நகராட்சி நிர்வாகம் அகற்றியதை கண்டித்து சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். உதகை தாவரவியல் பூங்கா எதிரில் சாலையோர கடைகளை உதகை நகராட்சி நிர்வாகம் காவல் துறையின் துணையுடன் கடந்த செப்.25ஆம் தேதியன்று அப்புறப் படுத்தியது. இதை கண்டித்து, புதனன்று சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கத் தலைவர் பிரியா தலைமை யில், உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் நூற்றுக்கும் மேற் பட்ட சாலையோர வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து, மாவட்ட வரு வாய் அலுவலர் முன்னிலையில், நகராட்சி ஆணையர், உதகை கோட்டாட்சியர், உதகை வட்டாட் சியர் மற்றும் சாலையோர வியாபாரிகள் சங்க தலைவர்கள் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், தாவரவியல் பூங்கா எதிரில் உள்ள நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள கடை களை சாலையோர வியாபாரி களுக்கு ஒதுக்கீடு செய்வது என்றும், அதுவரை வியாபாரம் செய்து வந்த இடத்திலே மீண்டும் கடைகளை வைத்துக் கொள்ள லாம் என உடன்பாடு ஏற்பட்டது. மேலும், சாலையோர கடை களை அகற்றும் நடவடிக்கையை நகராட்சி நிர்வாகமும், காவல் துறையையும் மேற்கொண்டால் சிஐடியு சார்பில் போராட்டங்கள் தீவிரப்படுத்தும் என சிஐடியு மாவட் டத் தலைவர் எல்.சங்கரலிங்கம், மாவட்டச் செயலாளர் சி.வினோத், மாவட்டப் பொருளாளர் நவீன் சந்திரன் மற்றும் சாலையோர வியாபாரிகள் சங்கச் செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் தெரிவித் தனர்.