திருப்பூர், ஜூலை 5 – முறைசாரா தொழிலாளர்களுக்கு நலவாரிய ஓய்வூதியம் உள்ளிட்ட பணப் பலன்களை தாமதப்படுத்தாமல் உடனே வழங்கவும், நலவாரியப் பதிவை நேரடியாக மேற்கொள்ள வும் வலியுறுத்தி சிஐடியு சார்பில் திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு சார்பில் திருப்பூர் மேட்டுப்பாளையம் நலவா ரிய அலுவலகம் முன்பாக செவ்வாயன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பனியன் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத் தலைமை வகித் தார். இதில் முறைசாரா தொழிலாளர்களின் பல்வேறு நலவாரி யக் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கே. ரங்கராஜ், மோட்டார் சங்கச் செயலாளர் ஒய்.அன்பு, கட்டுமான சங்கத் தலைவர் அவிநாசி ராஜன் ஆகியோர் உரையாற் றினர். இதில் முறைசாராத் தொழிலாளர்கள் கணிசமானவர் கள் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கம் எழுப்பினர்.