districts

img

அரசு சார்பு நிறுவன தொழிலாளர்களுக்கு போனஸ் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக். 26 – அரசு சார்பு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பந்தப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மாநில  அரசு நியாயமான போனஸ் வழங்கக் கோரி திருப்பூரில் சிஐ டியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் தியாகி குமரன் சிலை முன்பாக வியாழக்கிழமை  நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேளன மண்டல பொதுச்செயலாளர்  செல்லதுரை தலைமை வகித்தார். இதில் அரசுப் போக்குவ ரத்து, மின்வாரியம், கூட்டுறவு, நுகர்பொருள் வாணிபக் கழ கம், டாஸ்மாக் உள்ளிட்ட பொதுத்துறை மற்றும் அரசு சார்பு  நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம் பந்தப்பட்ட தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுடன் மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான போனஸ் வழங்க  வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது. கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு டாஸ்மாக் ஊழியர்  சங்க மாவட்டச் செயலாளர் ஒய்.அன்பு, மின்ஊழியர் மத்திய  அமைப்பு சார்பில் பாபு, சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர்  பி.பாலன் ஆகியோர் உரையாற்றினர். இதில் சிஐடியு மாவட் டத் தலைவர் சி.மூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் கே.உண் ணிகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர். நிறைவாக அரசுப்  போக்குவரத்து ஊழியர் சம்மேளன மண்டலப் பொருளாளர்  என்.சுப்பிரமணி நன்றி கூறினார்.