districts

img

தமிழ் மொழி தெரிந்த அலுவலர்களை பணியில் அமர்த்து

கோவை, ஜூன் 1- ஒன்றிய அரசு நிறுவனங்களில்  தமிழ் தெரிந்த அலுவலர்களை பணியமர்த்த வேண்டும் என  சிஐடியு-வினர் பி.எப் நிறுவ னத்தை முற்றுகையிட்டு போராட் டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை பாலசுந்தரம் சாலை யில் வருங்கால வைப்பு நிதி  (பிஎப்) அலுவலகம் உள்ளது. கோவை மாவட்டம் தொழிற்சா லைகள் நிறைந்த மாவட்டம் என் பதால், ஏராளமான தொழில் நிறு வனங்கள் தொழிலாளர்களிடம் ஊதியத்தில் ஒரு பங்கு பணம், நிறு வனம் ஒரு பங்கு பணம் என இந்த  பிஎப் அலுவலகத்தில் செலுத்தப் படுகிறது. இந்த அலுவலகத்தில் பெரும்பாலானவர்கள் இந்தி மற் றும் ஆங்கிலம் தெரிந்த வடநாட்டு  ஊழியர்களே பணியில் உள்ளனர். இதனால், பல நேரங்களில் பிஎப்  பணத்தை எடுப்பதற்கும், அதில்  எழும் சந்தேகங்களை தெளிவு  படுத்திக்கொள்ள தொழிலாளர் கள் பிஎப் அலுவலகத்திற்கு சென் றால் மொழி பிரச்சனையால் பெரி தும் அவதியும், அலைகழிப்பிற் கும் உள்ளாகின்றனர்.  இந்நிலையில், இன்டோசெல்  நிறுவனத்தில் உள்ள சுமார் 50  தொழிலாளர்கள் தங்களது பிஎப்  பணத்தில் உள்ள குளறுபடிகள் குறித்து தெளிவு படுத்த பிஎப்  அலுவலகத்திற்கு பலமுறை சென் றும் மொழிப்பிரச்சனையால் அவ திப்பட்டுள்ளனர்.

இப்பிரச்சனை குறித்து கோவை மாவட்ட சிஐடியு சங்கத் திற்கு அவர்கள் தெரிவித்தனர். அதனடிப்படையில் பிஎப் அலுவல கத்திற்கு சம்பந்தப்பட்ட பொருள் குறித்து விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளனர். மூன்று வார காலமாகியும் எந்தவித பதிலும் வர வில்லை. தொழிலாளர்கள் நேரில் சென்றால் மொழிப்பிரச்சனை. விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி னால் பதில் இல்லை என்கிற நிலை யில் புதனன்று பிஎப் அலுவல கத்தை இன்டொசெல் தொழிலா ளர்கள் சிஐடியு தலைமையில் முற் றுகையிட்டனர். அப்போது, தமிழ்  மொழி தெரிந்த அதிகாரிகளை, அலுவலர்களை நியமிக்க வேண் டும். தொழிலாளர்களின் பணத் தில் பிஎப் நிறுவனம் இயங்குகி றது. ஆனால், தொழிலாளிகள் இந்த அலுவலகத்திற்கு வருவ தற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது. அதிகாரிகளை சந்திப் பது என்பது இயலாத காரியமாக இருக்கிறது. உடனடியாக இந்த குறைகளை களைய வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். இதுகுறித்து சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகை யில், ஒன்றிய அரசு நிறுவனங்க ளான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், வங்கி,  ரயில்வே போன்ற அலுவலகங் களில் இந்தி தெரிந்தவர்களே அதி கம் நியமிக்கப்பட்டுள்ளனர். இத னால் பொதுமக்கள்,  தொழிலாளர் கள் அந்தந்த அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு சேவைகளை பெருவதற்கு பெரும் சிரமம் ஏற்ப டுகிறது.  எனவே, தொழிலாளர் களின் பணத்தில் இயங்குகிற இந்த  பிஎப் அலுவலகத்தில் தமிழ் மொழி  தெரிந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இல்லையெனில் ஆயி ரக்கணக்கான தொழிலாளர்களை திரட்டி  தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம், என்றார். இதனையடுத்து முற்றுகை ஈடுபட முயன்றவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மேலாளரை சந்திக்க ஏற் பாடு செய்ததையடுத்து போராட் டம் தற்காலிகமாக கைவிடப்பட் டது. முன்னதாக இப்போராட்டத் தில் சங்க நிர்வாகிகள் மாரிமுத்து, கண்ணுசாமி உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.