தருமபுரி, அக்.5- தொழிற்சங்கத்தை இழிவாக பேசும் பன் னாட்டு முதலாளிகளின் கைக்கூலியாக செயல் படும் காஞ்சிபுரம் ஆட்சியரை கண்டித்து சிஐ டியுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பண்டிகை கால விடுப்பு, நியாயமான ஊதிய உயர்வு கேட்டு போராடும் தொழி லாளர்களையும், தொழிற்சங்கத்தையும் இழிவாக பேசுவதும், பன்னாட்டு முதலாளி களுக்கு ஆதரவாகவும், தொழிலாளர்களை இழிவாக கருதும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சி யரை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இந் திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐ டியு மாவட்ட துணைத்தலைவர் ஜி.நாக ராஜன் தலைமை வகித்தார். இதில் மாநிலக் குழு உறுப்பினர் சி.கலாவதி, மாவட்டச் செய லாளர் பி.ஜீவா, மாவட்ட பொருளாளர் எஸ். சண்முகம், மாவட்ட நிர்வாகிகள் ஆனஸ்ட் ராஜ், சி.அங்கம்மாள் உட்பட திரளான தொழி லாளர்கள் கலந்து கொண்டனர். சேலம் இதேபோன்று சேலம் ஆட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ. கோவிந்தன் தலைமை வகித்தார். இதில் சங் கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வெங்க டபதி, மாவட்ட உதவித்தலைவர் எஸ்.கே. தியாகராஜன், மாவட்டப் பொருளாளர் வி. இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டு, ஆவேச முழக்கங்களை எழுப்பினர். நீலகிரி நீலகிரி மாவட்டம், உதகையிலுள்ள ஆட் சியர் அலுவலகம் முன்பு சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர்.சங்கரலிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட் டப் பொருளாளர் நவீன் சந்திரன் துவக்க உரை யாற்றினார். இதில் சிஐடியு மாவட்டச் செயலா ளர் வினோத், ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர் சங்கத் தலைவர் ராமன், குன்னூர் தாலுக்காச் செயலாளர் இளங்கோ, தலைவர் கண்ணன், விவசாய சங்கத் தலைவர் மாத வன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவை கோவை மாவட்டம், துடியலூர் பேருந்து நிலையம் அருகே சிஐடியு சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்.கேசவமணி தலைமை ஏற்றார். இதில், சிஐடியு மாவட்ட தலைவர் கே.மனோகரன், செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, இன்ஜினியரிங் சங்கத்தின் தலைவர் எஸ்.பி.சுப்பிரமணி, குடிநீர் வடிகால் வாரிய தொழிற்சங்க பொதுச்செயலாளர் ஆர்.சரவணன் உள்ளிட்டோர் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத் தில் திரளானோர் பங்கேற்றனர்.